Wednesday, March 16, 2016

கொலையும் செய்ய துணியும் சாதி வெறியிலிருந்து தப்பிக்க...

சாதி வெறி எனும் சமூகப் பேரிழிவு களைவதற்கான தீர்வுகள்:
1. இந்து மதத்தினை பின்பற்றுவதனாலேயே சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட ஒருவனைப் பார்த்து "நீ ஒரு தாழ்த்தபட்ட சாதியினை சேர்ந்தவன்" என்று பிற ஆதிக்க சாதியினரால் முத்திரை குத்தப்படுகிறான்.

2. இன்றைய சூழ்நிலையில் நிச்சயமாக சாதியை ஒருவன் மாற்றவே முடியாது. மதம் வேண்டுமானால் மாறலாம்.

3. இஸ்லாம் மதத்திற்கு ஒருவன் மாறினால் மட்டுமே ஆதிக்க சாதியினர் சற்று மரியாதை தருவார்கள். "வணக்கம் பாய்","வாங்க பாய்" என்பன போன்ற மரியாதைகள் கிடைக்கும். மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிய அந்த குடும்பம் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்திலிருந்து தான் பின்பு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள் என்பது அனைவராலும் மறக்கப்பட்டுவிடும்.

4. தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவரும் ஒன்றாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் இந்து மதத்தின்படி கடைசியான/ நான்காம் வர்ணமான சூத்திர சாதியினர் என்பவர்கள் இந்து மததிலேயே இல்லாமல் போய்விடுவார்கள்.

5. இப்போது கடைசியாக இருக்கும் வர்ணமான, மூன்றாம் வர்ணமான வைசிய வர்ணத்தினர்தான் அடுத்து இருக்கும் தாழ்வான சாதியினராக இந்து மதத்தில் வாழ்வார்கள். அவர்களும் பிற உயர்சாதியினரான பிராமண மற்றும் பிற உயர் சாதியினரால் "நீ ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினன் ", என்று அவமானப்படுத்தப்பட்டால் அவர்களும் இஸ்லாம் மதத்தினையே பின்பற்ற வேண்டிய கால வரும்.

6. வெளி நாடுகளுக்குச் சென்றாவது அந்த நாட்டின் குடியுரிமை பெற்றும் இந்த சாதிவெறி மிக்க கௌரவக் கொலை, சாதிய படுகொலை போன்ற சமூகப் பேரிழிவிலிருந்து தன்னையோ, தன் பரம்பரையையோ ஒருவன் காப்பாற்றிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment