Monday, January 25, 2016

தெளிவுகள் சந்தேகங்கள் கேள்விகள்?

இந்தியா என்ற நாடு என்பது எப்பொழுதிலிருந்து இருக்கிறது?
இந்திய நாடு என்றால் எது?
இந்தியா நாட்டின் எல்லைகள் எவை?
இந்தியா நாட்டின் எல்லைகள் இவை_ என்பது எப்பொழுதிலிருந்து எற்படுத்தப்பட்டது?
இந்திய நாடு என்பது எங்கிருந்து ஆரம்பிக்கிறது?
இந்திய நாடு என்பது எங்கு முடிகிறது?
இந்து மதம் என்று ஒன்று இருக்கிறதா?
இந்து மதம் என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது? அதற்கான ஆதாரம் என்ன?
இந்து மதம் என்று பெயர் வைத்தவரின் ஜெயந்தி விழா என்றைக்கு வருகிறது?
இந்து மதம் என்ற பெயரில் எத்தனை வருடமாக இருக்கிறது?
இந்து மதம் என்றால் என்ன?
இந்து மதத்தின் கொள்கைகள் என்ன?
இந்து மதத்திற்கென தத்துவம் ஏதாவது இருக்கிறதா?
இந்து மதக் கடவுளுக்கு ஏதேனும் குறிப்பிட்ட உருவம் உண்டா?
இந்து மதத்தின் கடவுள்/கடவுள்கள் யார் யார்?
இந்து மதம் ஒரே கடவுள் கொள்கை கொண்டதா? அல்லது பல கடவுள்கள் கொள்கை கொண்டதா?
இந்து மதக் கடவுள்களுக்கிடையே உறவு முறைகள் உள்ளனவா?
இந்து மதத்தின்படி மனிதர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டார்களா?
இந்து மதத்தின் படி அனைத்து மனிதர்களும் ஒரே கடவுளால் உருவாக்கப்பட்டார்களா?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுள் ஆணா அல்லது பெண்ணா?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுளின் பெயர் என்ன?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுள் ஆணைமட்டும் உருவாக்கினாரா அல்லது பெண்ணையும் உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் மனித ரூபத்தில் இருப்பவரா?
இந்து மத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் தானே மனிதனை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் வேறொரு பெண்ணின் மூலம் மனிதர்களை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் வேறொரு பெண் கடவுள் மூலம் மனிதர்களை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் என்ன பெயர் கொண்ட வேறொரு பெண் கடவுள் மூலம் மனிதர்களை உருவாக்கினார்?
இந்து மதம் மனிதர்களுக்கிடையே வர்ணங்களை அதாவது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளதா?
இந்து மதம் மனிதர்களை அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் பிரித்து வைத்து வேறுபடுத்துகிறதா?
இந்து மதம் மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்து வேறுபடுத்துகிறதா?
இந்து மதம் மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தி வைத்து அந்த வேறுபாட்டில் ஏற்றத் தாழ்வுகளை புகுத்துகிறதா?

இந்து மதத்தினை எற்றுக் கொண்ட மக்கள் யார்யார்?
இந்து மதத்தினை எற்றுக் கொண்ட மக்களிடையே எதேனும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது?
இந்து மதம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் படைத்ததா?
இந்து மதக் கடவுள்களே மனிதர்களை ஏற்றத்தாழ்வுகளுடன் படைத்தார்களா?

ஆதிகாலத்தில் ஒரு நாட்டினை கட்டமைக்கும் பணியில் ஈடுபடும் மனிதர்கள் கீழ்வரும் நான்கில் ஒரு நிலையிலேயே அடங்கி விடுபவர்களா?
ஆம், இல்லை அதற்கான விளக்கம்.
1. வைதிக அந்தணர்கள்/ பிராமணர்கள்
2. நாட்டைக் காக்கும் போர் தொழில் புரியும் சத்திரியர்கள்
3. விவசாயம்/ உற்பத்தி / தொழில்/ வியாபாரம் செய்யும் வைசியர்கள்
4. மற்ற அனைவருக்கும் ஏவல்/ சேவகம் செய்யும் சூத்திரர்கள்

இந்து மதத்தில் உயர்ந்த மானுட வர்க்கத்தினர் என்று யாராவது இருக்கிறார்களா?
இந்து மதத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா?

இந்த மானுட நிலைமையானது இந்தியா முழுவதும் ஒரே மாதிரி இருக்கிறதா?

இந்து மதத்தில் சைவம், அசைவம் போன்ற உணவு வேறுபாடுகள் உள்ளனவா?
இந்து மதத்தில் உயர்ந்த மானிடப் பிறப்பு என்று ஒன்று உள்ளதா?
இந்து மதத்தில் தாழ்ந்த மானிடப் பிறப்பு என்று ஒன்று உள்ளதா?


இந்து மதம் என்பது பிராமண குலத்தவர்களின் நிறுவனமா?
இந்து மதம் என்பது பிராமணர குலத்தவர்களின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் இயங்குகிறதா?
பிராமண குலத்தவர்களில் பிரிவுகள் காணப்படுகின்றனவா?
பிராமணர்களில் ஐயர் பிரிவை விட ஐயங்கார் பிரிவினர் உயர்வாக மதிக்கப்படுகின்றனரா?
ஐயர்களால் வழிபடப்படும் கடவுள் யார்?
ஐயங்கார்களால் வழிபடப்படும் கடவுள் யார்?
இந்து மதத்தின் அனைத்து விஷயங்களையும் பிராமண குலத்தினர்தான் 
கட்டுப்படுத்துகின்றனரா?

Sunday, January 24, 2016

சமூகப் பேரிழிவு களைவதற்கான தீர்வுகள்:

2016 திருநாள் கொண்டச்சேரி,
நாகப்பட்டினம் மாவட்டம்
சமூகப் பேரிழிவு களைவதற்கான தீர்வுகள்:
1. இந்து மதத்தினை பின்பற்றுவதனாலேயே சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட ஒருவன் "நீ ஒரு தாழ்த்தபட்ட சாதியினை சேர்ந்தவன்" என்று பிற சாதியினரால் முத்திரை குத்தப்படுகிறான்.
2. இன்றைய சூழ்நிலையில் நிச்சயமாக சாதியை ஒருவன் மாற்றவே முடியாது. மதம் வேண்டுமானால் மாறலாம்.
3. இஸ்லாம் மதத்திற்கு ஒருவன் மாறினால் மட்டுமே ஆதிக்க சாதியினர் சற்று மரியாதை தருவார்கள். "வணக்கம் பாய்","வாங்க பாய்" என்பன போன்ற மரியாதைகள் கிடைக்கும். மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு அந்த குடும்பம் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்திலிருந்து தான் பின்பு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள் என்பது அனைவராலும் மறக்கப்பட்டுவிடும்.
4. தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவரும் ஒன்றாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் இந்து மதத்தின்படி கடைசியான/ நான்காம் வர்ணமான சூத்திர சாதியினர் என்பவர்கள் இந்து மததிலேயே இல்லாமல் போய்விடுவார்கள்.
5. இப்போது கடைசியாக இருக்கும் வர்ணமான, மூன்றாம் வர்ணமான வைசிய வர்ணத்தினர்தான் அடுத்து இருக்கும் தாழ்வான சாதியினராக இந்து மதத்தில் வாழ்வார்கள். அவர்களும் பிற உயர்சாதியினரான பிராமண மற்றும் சத்திரிய சாதியினரால் "நீ ஒரு தாழ்த்தபட்ட வைசியன்", என்று அவமானப்படுத்தப்பட்டால் அவர்களும் இஸ்லாம் மதத்தினையே பின்பற்ற வேண்டும்.
6. வேறு நாடுகளுக்கு சென்று அங்கேயே குடியுரிமை பெற்றும் இந்த சமூகப் பேரிழிவிலிருந்து தன்னையோ, தன் பரம்பரையையோ ஒருவன் காப்பாற்றிக் கொள்ளலாம்.


2016 திருநாள் கொண்டச்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்
சமூகப் பேரிழிவு!
ஆனந்த விகடன்- தலையங்கம் (Jan 20, 2016)

நாகப்பட்டினம் மாவட்டம் திருநாள் கொண்டச்சேரி என்ற கிராமத்தில், இறந்துபோன தலித் முதியவர் ஒருவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்லவிடாமல் தடுத்த ஆதிக்கச் சாதியினரின் சாதித் திமிரும், இந்த அநீதிக்கு அனைத்து வகைகளிலும் துணை நின்ற அரசின் அதிகாரத் திமிரும் நவீனத் தீண்டாமையின் கோர முகங்கள். இந்தியாவின் எத்தனையோ கிராமங்களைப் போல, திருநாள் கொண்டச்சேரியும் ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்துதான் இருக்கிறது. செத்த பிறகும் ஒட்டியிருக்கும் திமிர் சாதிக்கு மட்டுமே இருப்பதால், ஊருக்கும் சேரிக்கும் தனித்தனியே சுடுகாடு. அங்கே சேரி சுடுகாட்டுக்குச் செல்ல சாலை வசதி இல்லை. 

இறந்தவர்களின் உடலை வயல் வரப்புகளின் வழியேதான் தூக்கிச் செல்ல வேண்டும். சுடுகாட்டுக்குச் செல்ல பொதுப்பாதை இருக்கிறது. ஆனால் அதன் வழியே செல்ல, ஆதிக்கச் சாதியினர் அனுமதிப்பது இல்லை. கடந்த நவம்பர் மாதம் 26ம்தேதி குஞ்சம்மாள் என்ற மூதாட்டி மரணம் அடைந்தார்.


மழை நேரச் சகதியில் வயல், வரப்புகளின் வழியே பிணத்தைத் தூக்கிச் செல்வது சிரமம் என்பதால், பொதுப் பாதையில் செல்ல தலித்கள் முயல… ஆதிக்கச் சாதியினர் அதை ஏற்கவில்லை. பதற்றம் உருவாகி, போலீஸ் குவிக்கப்பட்டு, இறுதியில் "எப்போதும் ஊர் 
வழக்கம்போல வரப்பின் வழியே தூக்கிச் செல்லுங்கள்" என தீர்ப்பு சொன்னார்கள் சட்டத்தின் காவலர்களான காவல்துறையினர்.இந்த நிலையில்தான் கடந்த 3-ம் தேதி குஞ்சம் மாளின் கணவர் செல்லமுத்து இறந்துபோனார். பொதுப்பாதையில் விடமாட்டார்கள் என்பது தெரிந்ததால், செல்லமுத்துவின் பேரன் உயர்நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். "பொதுப் பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.


ஆனால், சாதிவெறிக்கு முன்னால் நீதிமன்றம் எம்மாத்திரம்? சட்டம் பெரியதா… சாதி பெரியதா என்றால், சாதியே பெரியது என்பதை மறுபடி ஒருமுறை நிரூபித்தார்கள் திருநாள் கொண்டச்சேரியின் ஆதிக்கச் சாதியினர். இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் செயல்படும் அவர் களின் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டிய காவல்துறையோ, பொக்லைன் மூலம் புதியபாதை அமைத்து, "இதன் வழியே சடலத்தை எடுத்துச் செல்லுங்கள்" என்றது. சாதிப் பாகுபாட்டைக் கலைவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டால், தீண்டாமைச் சாலை அமைத்து சாதிவெறியை மேற்கொண்டும் உறுதிப்படுத்தும் வேலையைச் செய்தது காவல்துறை.


அந்தச் சாலையில் செல்ல மறுத்து, பொதுப்பாதையின் வழியே செல்வதற்கு தலித்கள் முயல… அவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, "சமூக அமைதியைச் சீர்குலைத்ததாக" 50 தலித் களைக் கைது செய்திருக்கிறது.மனித மாண்புகளுடன் வாழ அனுமதிக்காத இந்த அநீதியான சாதிவெறி அமைப்பு, கண்ணியமான மரணத்துக்கும் தடையாக நிற்கிறது. இதை அகற்ற வேண்டிய அரசின் காவல் துறையோ, நீதிமன்ற உத்தரவையே காலில் போட்டு நசுக்கி,சாதி காக்கிறது. 
2016 திருநாள் கொண்டச்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்

சாதியைப் பயன்படுத்திக் கொள்வதில் புதிய புதிய நுட்பங்களைக் கையாளும் அரசியல்கட்சிகளும் அரசும், சாதியை ஒழிக்க ஒரு வழி கண்டறியும் என நம்புவதற்கு இனி இடம் இல்லை.

மனிதகுல வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் சாதியை, நாம்தான் தூக்கித் தூர வீச வேண்டும். ஏனெனில் கழிவைச் சுமந்துகொண்டு வெகுதூரம் பயணிக்க முடியாது!-

ஆனந்தவிகடன் தலையங்கம் (20-1-16)