Wednesday, January 24, 2018

நம்பூதிரிகளும் கேரளாவும்

முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அர்த்தமுள்ள இந்துமதம் சொல்லித்தருவது.

வடநாட்டைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்தில் குடியமர்த்தப்பட்டனர். நம்பூதிரி குடும்பத்தின் முதல் மகன் வைசிய, சத்திரிய அல்லது சூத்திரப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்ற விதி அன்று உருவாக்கப்பட்டது. 
இதைவிடத் தைரியமான இன்னொரு விதி என்னவென்றால், எந்த சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்.

அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. இன்றைக்கு இதை ஒழுக்கக்கேடு என்று கூறுவார்கள். இந்த விதி முதல் குழந்தைக்கு மட்டும்தான் என்பதால் அதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது என்றார்கள் அன்று. (எம்.எஸ்.கோல்வால்கர், ஆர்கனைசர், ஜனவரி-2, 1961, பக்கம்-5)”

2004 ஆம் ஆண்டில் கோல்வால்கரின் எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்., 5-வது தொகுதியில் 28-32 பக்கங்களில் இடம்பெற்றுள்ள இந்த உரையிலிருந்து மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் நீக்கிவிட்டது. ஆனால் என்ன செய்வது, நூலகங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் பத்திரிகையை இதுவரை நீக்க முடியவில்லை.

“பிள்ளை இல்லாமல் அந்தந்தக் குலம் நசிவதாக இருந்தால் அப்போது அந்தப் பெண்ணானவள் தன் கணவன் மற்றும் மாமனாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்கிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம் (மனு 9-59)“ என மனு அன்றே அயோக்கியத்தனத்திற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டான். இப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று இந்த ஒழுக்கசீலர்கள் மறுக்க முடியுமா?.
முட்டாளே வரலாற்றை படி. தனது வரலாறு தெரியாத எவனும் தனக்கான எதிர்காலத்தை சரியாக அமைத்துக்கொள்ள முடியாது.
ஆறாம் அறிவிலிருந்து...

Monday, May 1, 2017

சாதி கட்சி ஆரம்பிக்கலாமா?

அமாவாசை:  என்ன மணியா! நாமலும் ஒரு சாதி சங்கம் ஆரம்பிக்கலாம்மா?

மணியன்: ஏன் அமாவாசை,   நம்ம ஜாதிக்காரன்களுக்கு எதாவது நல்லது செய்யணும்னு உனக்கு ஏதாவது வேண்டுதலா?






மாவாசை: அட போ மணியா, இந்த நாய்ங்க இருந்தா என்ன?  செத்தா என்ன? எல்லாம் ஒரு பொருளாதார முன்னேற்றத்திற்குதான்.


மணியன்: சாதி கட்சியை ஆரம்பிச்சு எப்படி நாட்டின் பொருளாதாரத்தை வளப்ப? ஒண்ணும் புரியலையே.

மாவாசை: மணியா,  நாட்டின் பொருளாதாரம்னா நான் சொன்னேன். நம்மமோட பொருளாதாரத்தை வளர்த்துக்கதான், நாமும் ஒரு சாதி கட்சி ஆரம்பிப்போம்னு சொல்றேன்.

மணியன்: நமக்குன்னு சாதி கட்சி ஆரம்பித்தால் பணம் வந்துடுமா? எங்கிருந்து வரும்?

மாவாசை: தேர்தல் வந்தா... பெரிய பெரிய கட்சிக்காரன்லாம், பெரிசா பெட்டி, பெட்டியா பணம் கொடுப்பானுங்க. மத்த நேரத்துல கட்டப்பஞ்சாயத்தும், தொழிலதிபர்கள மிரட்டியும், இல்லண்ண அவனுங்க காலில் விழுந்தும் பணம் புடுங்கறதும்தான், நம்ம வாழ்கைத்தரம் முன்னேறத்துக்கு... துணை புரியக்கூடிய ஊக்கக் காரணிகள்.

மணியன்: சாதி கட்சி ஆரம்பிச்ச உடனே நம்ம சாதிக்காரங்கலாம் நம்ம கட்சியில சேர்ந்துடுவாங்களா? அப்படீன்னா நம்ம சாதியில இருக்கிற நல்லா பெரிய படிப்பு படிச்சவீங்களா பார்த்து நம்ம கட்சியில சேர்த்துக்கலாம்மா.

அமாவாசை: நம்ம சாதியில இருக்கிற நல்லா படிச்ச பயலுக சாதி கீதீன்னு கிட்டகூட வரமாட்டானுங்க. படிக்காத பொறுக்கிகளும், அரைகுறையா படிச்ச பக்கிகளும், நிச்சயமா சாதிக்கட்சிக்குள்ள வந்து மாட்டிப்பானுங்க. நல்லவன்களே நமக்கு வேண்டாம். அவனுங்க வைச்சுக்கிட்டு நாக்கா வழிக்கிறது? அவனுங்க சக வாசமே வேண்டாப்பா....

மணியன்: சாதி கட்சி ஆரம்பிச்ச உடனே வந்து சேருவான்களா?

மாவாசை: சும்மா வந்து எவனும் சேர மாட்டானுங்க. அவனுங்களுக்கு பதவி ஆசையையும் அதனால வரகூடிய பண ஆசையையும்,  முதல்ல தூண்டிவிடனும். அப்பறம் பாரு எல்லாம் தானாவே நடக்கும்.

மணியன்: புதுசா நமக்குன்னு ஒரு சாதி கட்சியை வைச்சி நீ ஏதோ பெருசா திட்டம் போடுறன்னு மட்டும் நல்லாத் தெரியுது. நாம இரண்டு பேர் மட்டும் என்னத்தைப் பண்றதுண்ணே. அதையும் நீயே சொல்லு.

மாவாசை: நான் தான் தலைவன். நீதான் செயலாளர். போதுமா அவ்வளவுதான் கட்சி ரெடி. TASMAC போவோம் அங்க நம்ம ஜாதிக்கார நாய்ங்க குடிக்க வருவானுங்க. முதல அவனுங்களுக்கு நாமே நம்ம செலவுல எச்சை குடி ஊத்திக்குடுப்போம். அந்த நாய்ங்க “தலைவா, நீதான் அது, நீதான் இது, வருங்கால முதலமைச்சர் நீதான், பிரதம மந்திரி நீதான், ஏன் வருங்கால் அமெரிக்க அதிபரே நீதான் தலைவா” அப்பிடின்னு  குடிச்சுபுட்டு போதை ஏறிப்போய் நம்மல தலைமேல தூக்கி வைச்சு கொண்டாடுங்க. அந்த நாய்களுக்கும் இருக்கவே இருக்கு வரிசையா சில பதவிங்க. அந்த பட்டியல்படி  நீதான் நாயே அது, நீதான் நாயே இது அப்படின்னு -துணைத்தலைவர், பொருளாளர், அமைப்பு செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், செயற்குழு உறுப்பினர் 7,13, 21 பேர், அப்படின்னு வாய்க்கு வந்ததை அடிச்சுவுட வேண்டியதுதான். எல்லாருக்கும் சில பதவிகளை தூக்கி எரியுவோம். அவ்வளவுதான். இனிமே பணமழைதான் போ.

மணியன்: அவ்ளோ தான்னா? ரொம்ப ஈசியா இருக்கே.

மாவாசை: மணியா! தமிழ் நாட்ட பொறுத்தவரை ஜாதின்னா---
 1)அசிங்கம் பாக்குறவன், 2) அசிங்கம் பாக்காதவன் என இரண்டே பேர் மட்டுந்தான் இருக்கானுங்க.

மணியன்: சரி அமாவாசை, இப்போ நாம இரண்டு பேரும், நம்ம கூட சில நாயிங்களையும் சேர்த்துக் கிட்டோம். எப்படி பணம் சாம்பாதிக்கறது?


மாவாசை: எவ்வளவோ வழி இருக்கு. அதுல ஒரே ஒரு வழிய இப்பச் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. இங்க தடுக்கி  விழுந்தா காலேஜ் இருக்கு. நம்ம சாதியில எவ்வளவோ பேர் படிக்க கிளம்பிட்டாங்க. பொண்ணுங்களும், பையன்களும் படிக்கிற காலேஜ்ல காதல் என்பது ரொம்ப சகஜம். படிக்க வந்த இடத்தில பொண்ணுங்களுக்கும், பையன்களுக்கும் நட்புணர்வோடு கூடிய ஒரு புரிதல் இருக்கத்தானே செய்யும். அந்த நட்புப்புரிதல் என்பது பல மாணவர்கள்கிட்ட இருந்தாலும் யாரவது ஒரு மாணவன்கிட்ட அவனின் குணநலன்களின் அடிப்படையில், நண்பர்களிடம் பாசத்துடன் பழகும் பண்புகளின் அடிப்படையில் எதாவது பொண்ணுக்கு அவனின் பால் ஒரு ஈர்ப்பு வரத்தான் செய்யும். நாளடைவில் அந்த ஈர்ப்பு அவர்களுக்குள் காதலா நிலை கொள்ளும். இதெல்லாம் நட்போட நாளடைவில  சகஜமா நடக்கிற சமாச்சாரம்தான்.


சரி நிதர்சனத்துக்கு வருவோம். நமக்கு வேண்டியதெல்லாம் அந்த காலேஜ்ல எதாவது ஒரு பையன், அவனும் எதாவது தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் என்றும், கீழ் சாதி பையன் என்றும், ஆண்டாண்டு காலமா  முத்திரை குத்தப்பட்டு அவன் தலைமுறையிலேயே முதன்முதலா காலேஜ் படிக்க வந்திருப்பான். அந்த பையனுக்கும் நம்ம சாதிய சேர்ந்த பொண்ணுக்கும் மேல சொன்ன மாதிரி எங்கேயாவது ஒரு காதல் வந்திருக்கும்.

காலேஜ்ல சீட்டு வாங்கற அளவுக்கு படிச்ச பையனா இருக்கான்னா உண்மையிலேயே அவன் படிச்ச பையன் தான். பையன்கள் படிக்க வந்துட்டாங்க, கூட பொண்ணுங்களும் இருக்குதுங்க. வயசும் சமுதாயத்தை எதிர்கொள்ளும் வயசு. இந்த வயசுல பசங்கங்களுக்கு இளமையும், துடிப்பும் இருக்குத்தானே செய்யும். உன்னையும் என்னையும் மாதிரி சரியா படிக்காத மரமண்டைக இல்ல இப்ப இருக்கிற பசங்க. உலக அறிவு கைக்குள்ள கொடிக்கிடக்குது. படிச்சு முடிச்சுட்டு குப்பை அள்ளவா போவான்.  உலகப் பொருளாதாரம் வேகமா முன்னேறிட்டு இருக்கு. அந்த பொண்ணுக்கோ, பையனுக்கோ நிச்சயமா நல்ல வேலை சென்னையிலோ, வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ கிடைக்கத்தான் போகுது. அப்பறம் என்ன அந்த பையனும் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல கம்பேனிலே வேலைக்குச் சேர்ந்து கைநிறைய சம்பாரிக்கத்தான் போறாங்க.

மணியன்: ஏன் அமாவாசை! நாமளே, நல்ல கம்பேனில வேலைதானே வாங்கிக் குடுக்கப்போறோம். அதுக்கு அந்த கம்பேனிக்காரங்க நமக்குக் கமிஷன் குடுப்பாங்க அதானே உன் திட்டம்.

மாவாசை: நாசமாப் போச்சு. உன்னை வைச்சுக்கிட்டு நான் ஜாதியின் பேரால் பேரவை, சங்கம், கழகம், கட்சின்னு ஆரம்பிச்சு பதவி, அதிகாரம், பணம் அப்படின்னு சம்பாரிச்ச மாதிரிதான். முதல உன்னை தயார் பண்ணுறதே பெரியா வேலையா இருக்கும் போல இருக்கே.

மணியன்: பின்ன என்ன  நம்ம சாதிகாரப் பொண்ணுன்னு காதலிக்கிறான்னு சொல்ற. அதுவும் படிச்ச பையன்னு சொல்ற. அந்த படிப்புக்கு நல்ல இடத்தில வேலை கிடைக்கும்னு சொல்ற. நாம தானே சாதி கட்சின்னு ஆராம்பிக்கப் போறோம். அவங்களோட நல்ல வாழ்க்கைக்கு உறுதுணையால இருக்கப் போறோம்.

மாவாசை: அடேய், லூசு மணியா! நம்ம சாதியிலேயே காலேஜ் நடத்துற எவன்தான் , காலேஜ் சீட்டு இலவசமாத் தருவான். நம்ம சாதிகாரன் நடத்துற ஆஸ்பிட்டல்ல எவன் தான், தன் ஜாதிகாரனுக்கு மருத்துவம் இலவசமா பாக்குறான். நம்ம ஜாதிகாரன் நடத்துற தொழிற்சாலையில  தகுதியே இல்லாத தன் ஜாதிக்காரனை எவன் வேலைக்கு எடுத்து நஷ்டப்படுவான். ஜாதி ஜாதின்னு சொல்லுறது எல்லாம் பிசினஸ்டா மண்டையா.

நம்ம ஜாதிகாரன்லேயும் எவனும், நல்லா இருந்திடவேக் கூடாது. ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பிரச்சனையோ, தேவையோ உண்டாக்கிக்கிட்டே இருக்கனும். அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறத்துக்கோ, தேவை பூர்த்தியாகுறத்துக்கோ  நம்மளை தேடி அந்த நாய் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கணும்.  நாம ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை வைக்கணும். அப்பதான் பிஸினஸ் நல்லபடியாப் போகும்.

மணியன்:  ஏன் அமாவாசை! நம்ம ஜாதிக்காரன்களுக்குன்னு அப்படி என்ன வித்தியாசமான பிரச்சனை வந்துடப்போகுது. அல்லது தேவை இருந்திடப்போகுது. எல்லோருக்கும் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் தானே தேவைங்கிறது.


மாவாசை: எங்கெங்கையோ இடி விழுது. உம்மேல ஒரு இடி விழக்கூடாதா. விழுந்தா நானும் நிம்மதியா இருப்பேன்னே.


மணியன்: அசிங்கப்படுத்தா அமாவாசை. நான் என்ன தப்பா சொல்லிட்டேன். நல்லது தானே சொன்னேன்.

மாவாசை: நல்லத சொல்றதுக்கு எதுக்கு, உனக்கு ஒரு ஜாதி கட்சியோட செயலாளர் பதவி. ஒழுங்கு மரியாதையா கட்சியில கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு வெளிய போட பன்னி. எதுக்கெடுத்தாலும் குறுக்க குறுக்க பேசிக்கிட்டு என்னைய டென்சனாக்குறதே உனக்கு வேலையாச் போச்சு.

மணியன்: சரி சரி . ஒழுங்கா கேட்டுக்கிறேன். மேல சொல்லு.

மாவாசை: அடிப்படை தேவை கூட பூர்த்தி ஆகாத மனுசங்கிட்ட எப்படி மணி பணம் இருக்கும். பணம் இல்லாம வயித்து பாட்டுக்கே திண்டாடுற நாறப்பயலுக்கு எல்லாம் நாம ஒரு உதவியும் செய்யக்கூடாது. நாம்மால செய்யவும் முடியாது. அப்படி முடியும்னு வைச்சுக்கிட்டாலும் செய்யக் கூடாது. சோத்துக்கு இல்லாத நாய்கள நமக்குக் கீழே அடிமைவேலை செய்ய மட்டும் வைச்சுக்கணும். பீச்சாங்கை வேலைக்கு மட்டுந்தான் வச்சுக்கனும். அதாவது அடிதடி, வெட்டு குத்துக்கு மட்டுமே பயன்படுத்தனும். வேலை முடிஞ்சதும் தூக்கி வெளியே போட்டுடணும். கருவேப்பில்லை தெரியுமா, கறிவேப்பில்லை, கறிவேப்பில்லை.

மணியன்: நாம சொன்னா செய்வாங்களா? அதுக்கெல்லாம் பணம் வேணுமே.

மாவாசை: எச்சி சோறு நாய்.  அதையெல்லாம் Brain wash பண்ணி, எலும்பு துண்டு மாதிரி ரூ.5000 கொடுத்து இதை இதை செய்டா, இவனை இவனை அடிடான்னா செய்யும் படிக்காதா பொறுக்கி. அதே ரூ.50000 கொடுத்து இவனை வெட்டுடா அப்படின்னு சொல்லிப்பாரு, கரெக்டா நடு ரோட்ல போய்க்கிட்டு இருக்கிறவனை 100 பேர் பார்த்தாலும் அவமானமே இல்லாம அரிவாள தூக்கிக்கிட்டு போய் வெட்டுவான். அந்த ஒரு அடிமை, அவன் தான் நமக்குத் தேவையே.

மணியன்:  அதுக்கெல்லாம் நம்ம அப்பன் பாட்டன் சொத்தா இருக்கு எடுத்து செலவு பண்றதுக்கு. யாருதான் பணம் கொடுப்பா? யாருக்குதான் நம்மோட தேவையிருக்கும்?

மாவாசை: டேய், உனக்கு மானம், சூடு , சொரணை அதெல்லாம் இருக்கா. இருக்கும். ஆனா பெருசா இருக்காது. ஏன்னா நீ ஒரு அன்னாடம் காய்ச்சி நாய். உனக்கு அதெல்லாம் இருக்காது.

ஆனா, அப்பன்-பாட்டன் சொத்தான நிலபுலத்துல அடுத்தவங்களை சேத்துல இறக்கி வேலை வாங்கிட்டு, வர வருமானத்தில சோத்துல கை வைச்சு சாப்பிட்டுகிட்டு,   ஒடம்பு நோகாம வாழ்ந்துகிட்டு இருக்கான் பாரு ஒருத்தன் அவன் கிட்ட போய் நீ யாரு எப்படி பட்ட குடும்பம் அப்படி கேட்டுப்பாரு. அவன் சொல்லுவான் நான் பெரிய அவனாக்கும், நான் பெரிய இவனாக்கும், என் பரம்பரை அப்படிபட்டது, என் பரம்பரை இப்படிபட்டது அப்படின்னு சொல்லுவான். இதுமாதிரி நம்ம ஜாதியில கொஞ்சமே கொஞ்சம் பரம்பரை பைத்தியங்க வாழ்ந்துட்டு இருக்குதுங்க. அதுங்கதான் நம்ம டார்கெட்டு.

மணியன்: டார்கெட்டா? என்னண்ணே அவங்கிட்ட போய் நன்கொடை கேட்கப்போறோமா?

மாவாசை: நன்கொடை கேட்டா எவன்டா தருவான். அவன் பரம்பரை பற்றி அவனுக்கு இருக்கிற பெருமையான நினைப்பும், பேச்சும் தான் நமக்கு கிடைச்சிருக்கிற துருப்புச் சீட்டு. முதல்ல சொன்னேன் பாரு காலேஜ் படிப்பு, காதல் அதெல்லாம் அவன் வீட்லயும் அந்தந்த காலக்கட்டத்தில் நடக்ககூடியதுதான். இந்த சீன்லதான் நம்மள மாதிரி ஆளுங்க உள்ள போகணும். அந்த ஆளுக்கிட்ட உன் ஜாதி என்ன? உன் பரம்பரை என்ன? உன் பாட்டன் பூட்டன் பெருமை என்ன? நீ போய் இப்படி கேவலமா நடந்துக்கலாமா. அப்படின்னு சும்மா இருக்கிறவன உசுப்பேத்துனும். ஜாதி பேரச் சொல்லி உறி அடிக்கணும். வெறி ஏத்தணும். ஒம்பொண்ண ஒழுங்கா இருக்கச் சொல்லு இல்லன்னா நமக்குதான் அவமானம் அப்படின்னு ஜாதி வெறிங்கிற விஷத்தை கொஞ்சம் கொஞ்சமா அவனுக்குள்ள திணிக்கனும்.

மணியன்: நாம சொன்ன உடன கேட்பாங்களா?

நாம சொன்ன.... உடனேயே நல்ல படிச்ச குடும்பத்தை சேர்ந்த எவனும் நாம சொல்றத நிச்சயமாக் கேட்கவே.... மாட்டானுங்க.

படிச்ச குடும்பத்தை சேர்ந்தவங்ககிட்ட ஜாதி பற்றுதான் ஒட்டிக்கிட்டு இருக்குமே தவிர ஜாதி வெறி என்பதுதெல்லாம் நிச்சயம் இருக்காது. நல்லா புரிஞ்சுக்கணும் ஜாதி பற்று வேற. ஜாதி வெறிங்கிறது வேற.

மணியா! ஜாதி பற்று வைச்சிருக்கிறவனை சாதி வெறியனா மாற்றுவதில்தான் நம்மோட வெற்றியே இருக்கு . அந்த சாதிபற்றுக்கூட இரண்டாம் நிலை நகரங்களில் இருப்பவர்களிடம் மட்டுமே காணப்படும்.

தன் சாதிக்காரர்களையும், சொந்த பந்தங்களையும் விட்டு தள்ளி வாழ்ந்து கொண்டிருக்கும் சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் குடும்பத்தினரிடம் தன் சொந்த ஜாதி பற்று என்பது கறிவேப்பிலை போன்று தான் இருக்கும்.

பொதுவா ஜாதிவெறிங்கிறது நல்லா படிச்சு பெரிய உத்தியோகத்திலயும், பெரிய பதவியிலயும், அதிகம் ஊதியம் வாங்கிறவங்ககிட்டயும் நிச்சயம் இருக்காது. இங்க ஒன்ன நீ கவனிக்கணும், நான் சொன்னது அதிக ஊதியம் தானே தவிர அதிக வருமானம் இல்ல. குறிப்பாக அதிக நிலபுலத்தை வைச்சு வரும் விவசாய வருமானமில்ல.

சரி ரொம்ப ஆழமா போனா நீ மூளை குழம்பி போய்டுவ. சுருக்கமா சொல்றேன் எதையும் சிந்திக்காத எதிர்காலத்தை பத்தி யோசிக்காத ஒழுங்கா படிக்காத  முட்டாபயலுகக் கிட்டதான் நம்மமோட பாச்சாவே பலிக்கும்.

இந்த ஒழுங்கா படிக்காத முட்டாளுகளுக்கு சினிமா படத்தில காதல் ஜெயிச்சு காதலர்கள் ஒண்ணு சேர்ந்துடணும் என்று கிளைமாக்ஸ் வரை மனம் பதைபதப்போடவே படத்தை பார்ப்பானுங்க. எத்தனை முறை பார்த்தாலும் காதலர்கள் இணைந்து விடுவார்களா? மாட்டார்களா? என்று மனபதட்டத்துடன் படம் பார்ப்பார்கள் இந்த முட்டாளுங்க. ஆனா

1. தான் பெத்த பொண்ணு காதலிக்கிறதையே ஏத்துக்க முடியாது.
2. சொந்த சாதியில் தன் பொண்ணு காதலிப்பதையும் இவர்களால் ஏற்க முடியாது.
3. அவ்வளவு ஏன் தன் பொண்ணு சொந்த முறைப் பையகளை காதலிப்பதைக் கூட இவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

இவன்களுக்கு தன் பொண்ணுக்கு தான் தான் கல்யாணம் பண்ணிவைக்கணும். தான் யாரை கல்யாணம் பண்ணிவைக்கிறமோ அவன்கூட குடும்பம் நடத்தணும். அவன் எவ்வளவு பெரிய குடிகாரனா இருந்தாலும் சரி, மோசமான நடத்தை உள்ளவனா இருந்தாலும் சரி. இதுதான் அந்த முட்டாள் அப்பனின் நிலைபாடு. அவளா யாரையும் பார்த்துட்டு வந்து எனக்கு இவரை பிடிச்சிருக்கு. இவரை கல்யாணம் பண்ணிக் குடுங்கண்ணு கேட்கக்கூடாது. அப்படிப் பேசிட்டா அவ்வளவுதான்.

”பொண்ணாடி வளர்த்து வைச்சுருக்கிற” அப்படின்னு அவனுங்க தன் பொண்டாட்டி மேல இருக்கிற கோவத்தை எல்லாம் எப்படிடா தீர்த்துக்கறதுன்னு நினைச்சு இதுதான் சாக்குன்னு  பொண்டாட்டியா பொரட்டி பொரட்டி அடிப்பானுங்க. அவனுங்க எல்லாம் டெய்லி குடிச்சுப்புட்டு, முயற்சி செஞ்சும் ஒண்ணும் முடியாம உளவியல் ரீதியா பொண்டாட்டியால பாதிக்கப்பட்டவங்களா இருப்பானுங்க. சரி என்னத்துக்கு அடுத்தவன் வீட்டு படுக்கையறை சமாச்சாரம்லாம் நமக்கு. என்ன நான் சொல்றது.

தன் பொண்ணு தன் வீட்டிற்கு அடிக்கடி வரும் தன் முறை பையன்களின் மீது ஒரு ஈர்ப்பு வந்து அதன் மூலம் காதல் கொண்டாலும் அதனையும் ஏற்கும் பக்குவப்பட்ட மனம் அற்றவர்கள் தான் இந்த முட்டாள் பெற்றோர்கள்.

சொந்த முறை பையனை காதலிக்கிறதையே இங்க எவனாலும் ஏத்துக்க முடியாது.
சொந்த சாதியில் பொண்ணு காதலிக்கறதையே இங்க எவனாலும் ஏத்துக்க முடியாது.
தன் சாதியில் இல்லாம தனக்கு இணையான சாதியில பொண்ணு காதலிக்கிறதையும் இங்க எவனாலும் ஏத்துக்க முடியாது.
அப்படியிருக்கும் போது அவன் பொண்ணு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பையனை காதலிக்கிறதை எவனால ஏத்துக்க முடியும். இதெல்லாம் நமக்கு ஆண்டவனா பார்த்து கொடுத்திருக்குற கொடை தான் மணி.

தம்பி: அப்படின்னா யாரும் ஏத்துக்கறதே இல்லையா?

அண்ணன்: முதல்ல ஏத்துக்க மாட்டாங்க. அப்பறம் அவங்க வீட்ட விட்டு ஓடிப்போய் கல்யாண பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் நல்லா வாழ்ந்ததுக்கு அப்பறம் ஏத்துக்குவாங்க.

இவ்வளோ விசயத்தையும் நாம நல்லா ஸ்டெடி பண்ணிட்டுதான் அந்த குடும்பத்தை கெடுக்கற வேலையைப் பாக்கப்போணும்.

அப்பங்காரன் சொன்ன உடனே அவன் பொண்ணு இல்ல எவன் பொண்ணும் கேட்டுராது. அவனுக்கு அவன் பொண்ணு தன் பேச்ச கேட்கல அப்படிங்கிற அவமானமும் கூட சேர்ந்துடும். நான் தான் பெத்தேன், வளத்தேன், படிக்க வைச்சேன், மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பணணி வைக்கத்தெரியாதா எனக்கு. அப்படின்னு மாடு வளர்க்கிற மாதிரியே அப்பன்காரன் சிந்திப்பான். அப்படியே தான் தன் சிந்தனையே வெளிப்படுத்துவான். அவன் அப்படித்தான் பேசணும். இல்லாட்டிக்கூட நாம அப்படித்தான் பேசுறதுக்கு அவனை தூண்டனும். அப்பத்தான் நாம நல்லா இருக்க முடியும்.

பொண்ணோ, பையனோ நல்லா படிக்க வைக்கிறது மட்டுதான் பெற்றவர்களின் கடமையா இருக்கணும். மத்தபடி அவர்களின் வாழ்க்கை அவர்களின் கையில் என்பது தான் உண்மையும் கூட. ஆனா எல்லோரும் நல்ல சிந்தாந்தப்படி போனா நமக்கு எங்க வேலையிருக்கு. நாம மூடிட்டுப் போக வேண்டியதுதான்.

முதல்ல ஆரம்பிக்கிறவன் மேல இருப்பான், எல்லாமே MLM  மண்டையா மல்டி லெவல் மார்க்கெட்டிங்





Saturday, April 1, 2017

கோவிலுக்கு போய் சாமி கும்பிடுங்கள்

கோவிலுக்கு போய் சாமி கும்பிடுங்கள்.

உலகின் 99% பிரச்சினைகளுக்கு அவனவன் புத்தியில் புகுத்தப்பட்டுள்ள கடவுள் உருவமும், அந்த உருவத்தைத் தாங்கிப்பிடிக்கும் மதமும், மதவெறியும் தான் காரணம்.

கடவுளை உனக்கு கற்பித்தது யார்? உன் தந்தையா? அப்படியென்றால் அவருக்கு என்று படி நிலைகளை உயர்த்திக் கொண்டே செல்.

 தமிழனுக்கு/ இந்தியனுக்கு கற்பித்தவன் யார்? அமெரிக்கனுக்கு கற்பித்தவன் யார்? ஜப்பானியனுக்கு கற்பித்தவன் யார்? அரேபியனுக்கு கற்பித்தவன் யார்?
ஏன் உன்கடவுளே பிற நாடுகளிலும் தன்னையே நிலை நிறுத்திக்கொள்ளவில்லை?

அல்லது மனிதனே கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டானா? சாதாரணமாக மனித குலத்தில் பிறந்து, அவன் இறப்பிற்குப்பின் கடவுள் நிலைக்கு பிற்கால மனிதர்களால்  உயர்த்தப்பட்டார்களா?

அப்படி உயர்த்தப்பட்டவர்கள் எப்படி மனிதர்களை உயர்வு தாழ்வாகப் படைபார்கள்? அவர்களுக்கு  பின் உள்ள அரசியல் என்ன அதனால் பயன் பெறுபவர் யார்?

ஏன் கடவுளை தொழவோ தொட்டு கும்பிடவோ எனக்கு அனுமதி இல்லை..?

கோவில் உண்டியலில் போடப்படும் காசு எங்கு போகிறது. அவ்வளவு சக்தி உள்ள கடவுள் மனிதனின் பிச்சைக் காசை வேண்டுகிறாரா?

ஏன் நிறைய கடவுள்கள் ஏன் நிறைய மதங்கள்?

உலகம் ஒன்றுதான் என்னும் போது எப்படி பல கடவுள்கள் இருக்க முடியும். பல மதங்கள் இருக்க முடியும்?

உலகில் அத்தனை உயிர்கள் இருக்கும் போது கடவுள் மட்டும் மனித உருவில் இருப்பது ஏன்?

இந்த கடவுள் கோட்பாட்டிற்குப் பின் உள்ள திருட்டு மத அரசியல் என்ன?
அந்த மத அரசியலின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்யும் மனிதர்கள் யார்யார்? அந்த மனிதர்கள் எந்த வர்ணத்தினைச் சார்ந்தவர்கள்? எந்த சாதியினைச் சார்ந்தவர்கள்? எந்த மொழியினைச் சார்ந்தவர்கள்?

பார்ப்பணீயத்தை நோக்கி என்றும் கேள்வி கேட்காதீர்கள்?
பார்ப்பணீயத்தை வீழ்த்தும் சக்தி கேள்வி கேட்பது அல்ல?

பார்ப்பணீயத்தை ஒதுக்குங்கள். பார்ப்பணீயத்திடமிருந்து விலகி நில்லுங்கள்.

பார்ப்பணீயத்தின் திறனையே சடங்குகளுக்கு உயிரூட்டுவது. அதைச் செயல்படுத்த அக்னி வேள்விகள், யாகங்கள் நம்பவைப்பது. அப்போது திரும்பத் திரும்பச் சொல்வதற்கு சம்ஸ்கிருத மொழியில் உள்ள சாதாரண வார்த்தைகளை ஏதோ புதிரான மந்திரங்கள் என பிரமிப்பைக் கூட்டுவது. அம்மந்திரங்களை எழுதிவைத்துள்ள சம்ஸ்கிருத மொழியே அதன் ஆணிவேர். அதுவே  பிறரிடமிருந்து அவர்களைப் பிரித்துக் காட்டுகிறது. அம்மொழியே அவர்களின் வலைப்பின்னல். அம்மொழியே அவர்களுக்கான தொடர்பு மொழி.

சமஸ்கிருதம் அறியாத மேலைநாடுகள் அறிவியல் வளர்ச்சியில் உலகின் உச்சாணிக் கொம்பில் உள்ளன.

இவர்கள் இன்னமும் யாகம் வளர்த்து தீயில் பொருட்களை போட்டு தேவர்களுக்கு உணவு படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பார்ப்பணீயத்திற்கு சோம்படிக்கும் கூட்டமும் அவர்களை நக்கி பிழைக்கும் பாத வருடிகளும் எல்ல நிலையிலும் இங்கு இருக்கிறார்கள்.

பார்ப்பணீயத்தை கேள்வி கேளுங்கள், பார்ப்பணீயத்தை  ஒதுக்க ஆரம்பியுங்கள். பார்ப்பணீய சடங்குகளை செய்யாமல் புறக்கணியுங்கள்.

மதமும், கோயிலும், மடமும் MLM businessதான். 

Thursday, March 31, 2016

சாதியும்... உயர் கல்வியும்... 100 பில்லியன் பிஸ்னசும்!


சாதியும்... உயர் கல்வியும்... 100 பில்லியன் பிஸ்னசும்!


மிழகத்தில் அதிக அளவு இடம்பெயர்வுகள் இருக்கின்றன. பெருவாரியான மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வாதாரம், கல்வி போன்றவை அதற்கான காரணங்களாக இருந்தாலும், பிரதான காரணமாக இருப்பது தம் சாதிய அடையாளங்களை மறைப்பதற்கானதாகவே இருக்கிறது.
ஆனாலும், நகரங்களிலும் நவீன தீண்டாமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சாதியம் தமக்கு கிடைக்கின்ற அனைத்து வழிகளிலும் தம்மை புதுப்பித்துக் கொள்கிறது. வேறு கலாச்சாரம் கொண்டோர் அண்டை அயலாராக வசிப்பதை விரும்பாதவர்கள் பற்றிய பன்னாட்டு கணக்கெடுப்பு ஒன்றில் ஜோர்டானியர்களுக்கு அடுத்தபடியான இரண்டாமித்தை இந்தியர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த நவீன காலங்களிலும்  இந்தியாவின் சாதி முறையானது, ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. இது, நமது கல்விமுறை சாதிய பாகுபாட்டை ஒழிப்பதில் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது.
இந்த சூழலில்,  கல்வி வளாக வன்முறைகள் குறித்து அண்மையில் ஆதவன் தீட்சண்யா ஆற்றிய உரை இயல்பாக முக்கியத்துவம் பெறுகிறது. 
 

அவரின் உரையிலிருந்து....

சாதி படிநிலைகளை தற்காத்து கொள்வதற்கே, கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது :


"இந்திய மக்கள் பலர் பேசக் கேட்டு இருக்கிறோம், அதாவது, பிரிட்டிஷ் அரசு மட்டும் இங்கு வரவில்லை என்றால், நம் மக்கள் பலர் கல்வி நிலையங்களுக்குள் நுழைந்திருக்க முடியாது, கல்வி கற்று இருக்க முடியாது.  ஆனால், அது உண்மையில்லை. அவர்கள் கல்வியை இங்கு அறிமுகப்படுத்தியபோதே அனைத்து தீண்டாமைகளுடன்தான் அறிமுகப்படுத்தினார்கள். 

இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் பாராளுமன்றம், 1813-ம் ஆண்டு நிறைவேற்றிய ஒரு மசோதா, “ இலக்கியத்தைப் புனரமைப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும், அறிவு வளம் நிரம்பிய இந்தியர்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பிரதேசங்களில் வாழும் மக்களிடம் விஞ்ஞான அறிவைப் புகுத்தி வளர்ப்பதற்ககவும், இந்தியாவின் அதிக வருமானங்களிலிருந்து ஆண்டுதோறும் 1 லட்சத்துக்குக் குறையாத பணத்தை ஒதுக்கி மேலே கண்ட நோக்கங்களின் பொருட்டு செலவிட வேண்டும்...” என்று வலியுறுத்தியது.
இதற்கு  இங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், " நாம் சமஸ்கிருத கல்வி கொடுப்தே போதுமானது..." என்று பதிலளித்தார்கள். அதன்பின்பு, இங்கு பல கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், எந்த கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்பு, கல்வி தொடர்பான பல அறிக்கை பரிமாற்றங்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குள் நடந்தது. இந்த அறிக்கைகள் அனைத்தும், "நாம் அனைவருக்கும் கல்வி கொடுக்க தேவையில்லை. சமூகத்தில் மேற்தட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் கல்வி அளிப்பது போதுமானது. இதன் மூலமே நாம் அறிவார்ந்த சமூகத்தை கட்டமைத்துவிட முடியும்' என்பதாக இருந்தது. 1830ல் அனுப்பப்பட்ட ஒரு அறிக்கையானது,  “எண்ணிக்கையில் மிகப் பெருமளவில் உள்ள வகுப்பினரிடம் நேரடியாகச் செயல்படுவதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் பலனைவிட,  மேல்நிலை வகுப்புகளிடையே கல்வியின் தரத்தை உயர்த்துவதன் மூலம் சமுதாயத்தின் கருத்துகளிலும் உணர்வுகளிலும் மிகப் பெருமளவில் அனுகூலமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்றது.”

பிரிட்டிஷ் அரசு கல்விநிலையங்களில் நிலவிய தீண்டாமை:

கல்வி அளிப்பதில் மட்டும் தீண்டாமை இல்லை. கல்வி நிலையங்களிலும் தீண்டாமை நிலவியது. அகமத் நகர் பிற்படுத்தப்பட்ட மக்கள்,  "எங்களுக்கும் கல்வி அளிக்க வேண்டும்" என்கின்றனர். தங்களுக்கான கல்வி நிலையத்தை ஏற்படுத்த ஆகும் செலவையும் தாங்களே ஏற்றுக் கொள்ள முன் வருகின்றனர். இதற்கு அனுமதியளித்த பிரிட்டிஷ் அரசு, அதற்கான அனுமதி அறிக்கையை இட்டாலிக் எழுத்துருவில் (italic font) எழுதியது. அதற்கான காரணமாக, "இதுபோல் அனுமதி அளிப்பது, இதுவே முதன்முறை. அதை குறிப்பிடவே, இவ்வாறு எழுதப்படுகிறது" என்று சொல்லப்பட்டது . 1855 நவம்பர்  மாதம், அகமத் நகர் வாசிகளது பங்களிப்புடன் கீழ்ச் சாதியினர் கல்வி பயில முதன்முதலாக ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. பின்பு அனைத்து பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாழ்த்தப்பட்ட மக்களுடன் ஒன்றாக, உயர் சாதி மக்கள் படிக்க விரும்பாத காரணத்தினால், பல பள்ளிகள் மூடப்பட்டன. சில தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் உயர் சாதி மக்களால் தீக்கிரையாக்கப்பட்டன. 

சுதந்திர இந்தியாவில் கல்வி நிலையங்களில் பாகுபாடுகள்:

கல்விக்கூடங்கள் பொதுவானவை,  சாதியுணர்வோடு சிலர் இருப்பது தனிப்பட்ட பிரச்னை என சொல்லப் படுகிறது. கல்வி அமைப்பையே சாதியப் பாகுபாட்டுடன்தான் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கி வைத்து விட்டுப் போனது. இதில் பெயரளவுக்கு கூட எவ்வித மாற்றமுமின்றி, அதனை பாதுகாப்பதற்கான முயற்சி சுதந்திர இந்தியாவில் நடந்தது, நடக்கிறது. 

பெரும்பாலும் பள்ளிகள் ஊருக்குள்தான் இருக்கும், உயர்சாதி மக்கள் குடியிருக்கும் தெருவுக்குள் அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்ட மக்கள், எப்படி ஊருக்குள் இருக்கும் பள்ளிக்குள் செல்ல முடியும்...? சாதி கடந்து பழகாதபடி   மாணவர்கள் பிரித்தே அமரவைக்கப்படுகின்றனர். மதிய உணவு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளிலும் இது தொடர்கிறது. இது தாழ்த்தப்பட்ட மாணவருக்கு ஆளுமை சிதைவை ஏற்படுத்துகிறது. இந்த உளைச்சலால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும்,  கற்கும் ஆர்வம் குன்றி, பள்ளிக்கு வருவது குறையவும் காரணமாக அமைகிறது. இந்த காரணங்களால், மாணவன் மன உளைச்சலுக்கு உள்ளாகி, சில சமயம் தற்கொலை முடிவுக்கே தள்ளப்படுகிறான்.  

கோட்டாவும், இட ஒதுக்கீடும்: 

 பட்டியல் இன,  பிற்படுத்தப்பட்ட  மாணவர்களுக்கு அருகாமை கல்லூரிகளும், மரபான படிப்புகளுமே தெரிந்திருக்கின்றன.  இவர்களுக்கு, மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் குறித்து போதிய அறிமுகமில்லை. தெரிந்திருந்தாலும், நுழைவுத்  தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் பெரும் செலவு பிடிக்கக்கூடியதாகவும், அவை நகரங்களில் மட்டுமே நடப்பதாலும்  பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் பங்கேற்க முடிவதில்லை. 

அசோசெம் (ASSOCHAM, The Associated Chambers of Commerce of India) மதிப்பீட்டின்படி, 100 பில்லியன் ரூபாய் புழங்கும்  தொழிலாக ராஜஸ்தான் மாநிலம் 'கோட்டா' என்ற ஊரில் நடக்கும் ஐஐடி நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்பு  உருவெடுத்துள்ளது. ஐஐடியில் படிக்கும் நான்கில் ஒருவர் 'கோட்டா' வில் பயிற்சி பெற்றவர்கள்.   அதாவது மேட்டுக்குடி, உயர்சாதி, நகரப் பின்புலமுள்ளவர்கள், கல்வி பெற்ற முதல் தலைமுறை பட்டியலின, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் இருந்தும், அரிதாக ஊரகப் பகுதிகளில் இருந்தும் சில மாணவர்கள் இந்த நிறுவனங்களுக்குள்  நுழைகின்றனர். சுயமான தயாரிப்பில் நுழைவுத்தேர்வு எழுதும் இவர்களது மதிப்பெண்,  தரவரிசை பின்தங்கும். எனவே இடஒதுக்கீட்டில் நுழைகிறார்கள். மேட்டுக்குடி, உயர்சாதி, நகரப் பின்புலமுள்ளவர்கள் போதிய பயிற்சி, வழிகாட்டுதலுடன் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மெரிட்டில்  நுழைகிறார்கள்.

பொதுப்போட்டிக்குரிய மதிப்பெண் பெற்றாலும் பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை அவரவர் சாதிக்குரிய இடஒதுக்கீட்டிற்குள் அடைத்துவிட்டு பொதுப்போட்டிக்குரிய  மொத்த இடங்களையும்  உயர்சாதியினருக்கு ஒதுக்கிக்கொள்ளும் மோசடி நடந்துவருகிறது. இதன் காரணமாக, மெரிட்வாலாக்கள்  திறமைசாலிகள்,  இடஒதுக்கீட்டில் நுழைகிறவர்கள் திறமைக் குறைவானவர்கள் என்கிற கற்பிதமான முன்முடிவு,  உயர் கல்வி நிறுவனங்களில் வலுவாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த முன் முடிவுடன்தான் தேர்வு தாள்களும் திருத்தப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி வர்த்தமான் மருத்துவக் கல்லூரியில்,  பிஸியாலஜி என்கிற பாடத்தில் மட்டும் பட்டியல் இன மாணவர்கள் திரும்பத்திரும்ப ஃபெயில் ஆகி இருக்கிறார்கள். இதில் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின் நடந்த பொது தேர்வில், பங்கேற்ற 25 மாணவர்களில்  24 பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.  இது அப்பட்டமாக, தேர்வு தாள்கள் முன்முடிவுடன் திருத்தப்படுவதை காட்டுகிறது. 

ஏன் ரோஹித் வெமுலாக்களும் மரணிக்கிறார்கள்...?

உயர் கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களுக்கு அது தரும்  பெருமிதம் மகிழ்வானதாக இருந்தாலும், தகுதி குறைந்தவர் என்பதன் பேரால் அன்றாடம் சந்திக்கிற  அவமதிப்புகள், புறக்கணிப்புகள் மிகுந்த  மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நாம் செந்தில் குமார்களையும் ரோஹித் வெமுலாக்களையும் இழக்கிறோம்.

சரி தீர்வன்ன...?

சாதியை பற்றி பேசாமல், நாம் சாதியை ஒழிக்க முடியாது. சாதி ஒழிப்பு கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டும் முற்போக்காளர்களின் வேலை இல்லை. வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் சாதியின் தீமைகளை பேசுங்கள், குறிப்பாக, குழந்தைகளிடம் பேசுங்கள். அனைவரையும் சமமாக மதிக்க கற்று தாருங்கள். இப்போது பிரசாரத்தில் மூலமாக மட்டும் சாதியை ஒழித்துவிட முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. அது நிச்சயம் முடியாது. பிரசாரத்தின் மூலமாக சாதியை ஒழிக்க முடியுமென்றால், அதே பிரசாரத்தின் மூலமாக சாதியை தக்கவைத்து கொள்ள முடியும்தானே...? சாதியை ஒழிப்பதற்கு முதலில், முற்போக்காளர்கள் சாதி ஒழிப்பை தம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். சாதி குறித்த கூட்ட மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும். அப்போது தான் சமநிலை சமூகத்தை கட்டமைக்க முடியும். 

இவ்வாறாக இருந்தது அவரின் உரை.


- மு. நியாஸ் அகமது

ஜெயமோகன்: அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை, ஈ வே ரா வின் அணுகுமுறை

http://www.jeyamohan.in/368#.Vv3W4Jx97IU
http://www.jeyamohan.in/368

எழுத்தாளர் ஜெயமோகன்

...................ஆட்சியதிகாரத்தைக் கையாள விரும்பிய உயர் குடியினரால் உருவாக்கப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து உருவானது.  அன்று வரி செலுத்துவோர் மட்டுமே வாக்களித்தனர். ஆகவே நிலமும், சொத்தும் வைத்திருந்த பிராமணர் வலுவான சக்தியாக இருந்தனர். அதனால் அந்த இயக்கம் பிராமணரல்லாதார் இயக்கமாக ஆரம்பித்து ஆட்சிக்கு முயன்ற போது ஜஸ்டிஸ் கட்சியாக ஆகியது.

சுதந்திரத்திற்குப் பின்னர் அனைவருக்கும் வாக்குரிமை வந்த போது, பிற பிற்பட்ட சாதியினர் எண்ணிக்கை பலம் காரணமாக அரசியல் சக்தியாக ஆனார்கள். அப்போது ஈ.வே.ராவின் இயக்கம் அவரை மீறி சி.என்.அண்ணாத்துரை தலைமையில் பிற பிற்பட்ட சாதியினர் இயக்கமாக ஆகியது. பிராமணர் வெறுப்பு என்ற கொடியின் கீழ் உயர் சாதி நிலப் பிரபுக்களையும், குடியானவ சாதிகளையும் இணைக்கவும், அதிகாரத்தை நோக்கி செல்லவும் அது முயன்றது. ஒரு கட்டத்தில் உயர் சாதியினர், பிற பிற்பட்ட சாதியினரின் எண்ணிக்கை பலத்தால் ஓரம் கட்டப்பட்டு முற்றிலும் பிற்பட்ட சாதியினருக்கான அரசியலியக்கமாக அது ஆகியது. இத்தருணத்தில் ஈ.வே.ராவும் அதிகார அரசியலில் ஓரம் கட்டப் பட்டார். அவரது மரணத்துக்குப் பின்னரே அவர் ஒரு புனித தந்தைச் சின்னமாக ஆக்கப் பட்டார்.
தலித்துக்கள் மீதான ஈ.வே.ராவின் அணுகுமுறை இன்று தமிழ் நாட்டில் மிகக் கடுமையாக விமரிசிக்கப் படுகிறது. வரும் காலத்தில் அது மேலும் வலுப்படவே செய்யும். நடைமுறையில் ஈ.வே.ரா தலித்துக்களுக்காக ஏதும் செய்யவில்லை. அவரது ஆதரவுத் தளங்களில் இருந்த கடுமையான சாதிக் கொடுமைகளைத் தடுப்பதற்காகக் குரல் கொடுக்கவோ, திட்டவட்டமான போராட்டங்களில் ஈடுபடவோ இல்லை. பல தலித் போராட்டங்களில் அவர் எடுத்த மேம்போக்கான நிலைப்பாட்டை, இன்று தலித் சிந்தனையாளார்கள் பலர் கடுமையாக விமரிசித்தும் வருகிறார்கள் .
தமிழகத்தில் தலித்துக்கள் தங்களை நேரடியாக அடக்கி ஆண்ட பிற்படுத்தப் பட்ட  மக்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கான எந்த போராட்டத்தையும் அவர் நிகழ்த்தவில்லை. இந்த உண்மையை மறைக்கவே அவர் கேரளத்தில் பங்கு கொண்ட ஒரே போராட்டமான வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டம் பெரிது படுத்தப் படுகிறது. இங்கே கவனிக்கத் தக்கது என்னவென்றால் வைக்கத்தில் ஆலய நுழைவுக்காகப் போராடியவர்கள் தலித்துக்கள் அல்ல, பிற்படுத்தப் பட்டவர்களான ஈழவர்களே. அவர்களுடன் இணைந்தே ஈ.வே.ரா போராடினார். இந்த உண்மை இங்கே பேசப் படுவதே இல்லை.
தமிழகத்தில் ஈ..வேராவின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னரே தலித் எழுச்சி உருவாகிவிட்டிருந்தது. அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்கள் அவ்வெழுச்சியின் நாயகர்கள். ஆனால் அந்த எழுச்சியை பிராமணரல்லாத உயர்சாதியினரின் பிராமண எதிர்ப்பு அரசியலுடன் பிணைத்தது வழியாக அதை மழுங்கடித்தார் ஈ.வே.ரா.  அவரது கொள்கைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் அரசியலதிகாரம் நோக்கிச் செல்லத் தோள் கொடுக்கும் சக்தியாக தலித்துக்களை முக்கால் நூற்றாண்டுக் காலம் நிறுத்தி வைத்தன. பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துக்களை ஒடுக்குகிறார்கள் என்ற நடைமுறை உண்மையை பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோஷத்தால் மூடி வைத்தது ஈ.வே.ராவின் இயக்கம்
ஈ.வே.ரா மறைந்து அரை நூற்றாண்டு கழித்து, உருவான தலித் இயக்கங்கள் தங்கள் முன்னோடிகள் நிறுத்தி விட்ட புள்ளியில் இருந்து, ஈ.வே.ரா தொடங்கிய புள்ளியில் இருந்து மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டியிருந்தது. இந்த அடிப்படையிலேயே அவர்கள் ஈ.வே.ராவை எதிர்க்கிறார்கள். இன்று தலித் இயக்கங்கள் உருவாகி தலித் விடுதலைக்கான ‘உண்மையான‘ போராட்டங்கள் நடக்கும் போது ஈ.வே.ராவின் ஆதரவுத் தளமே அவர்களின் முதல் எதிரியாக இருப்பதையும், எவரும் காணலாம்.
தலித்துக்கள் அறிவும், விவேகமும் சற்று குறைவானவர்கள், அவர்களையும் நாம் சற்று அணைத்துப் போக வேண்டும் என்பதே அவரது பார்வையாக இருந்துள்ளது. இந்த உயர்சாதிப் பார்வையை  அவர் தவிர்த்திருக்க முடியாது, அது ஓரளவு அவரது அந்தரங்க நம்பிக்கை, ஓரளவு அரசியல் சமரச நிலைப்பாடு. அவருக்கு ஆதரவுத் தளமாக இருந்த உயர் / நடுத்தர சாதிகளின் நம்பிக்கை அது. அந்த மனப் போக்குக்கு வெளியே அவரால் அதிகம் நகர்ந்திருக்க முடியாது.
ஈ.வே.ரா அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தலித்துக்களின் வரலாற்றுக்கான ஒரு முன் வரைவு பண்டித அயோத்தி தாசரால் முன் வைக்கப்பட்டு பிற இரு தலித் தலைவர்களால் வலுவாக முன்னெடுக்கப் பட்டிருப்பதை இன்று தலித் ஆய்வாளர்கள் நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். தலித்துக்கள் தங்கள் மரபாலோ, குணத்தாலோ இழிந்தவர்கள் அல்ல என்பதே அந்த வரலாறு. அவர்கள் இந்நிலத்தின் பூர்வகுடிகள். நில உடைமையாளர்கள். பழைய பௌத்தர்கள். பௌத்தம் வீழ்ச்சியடைந்த போது நிலம் பிடுங்கப் பட்டு மெல்ல,மெல்ல ஒடுக்கப்பட்ட நிலை அடைந்தவர்கள். இதை அயோத்தி தாசர் ஆதாரங்களுடன் முன்வைத்து பேசியிருக்கிறார். அக்காலத்து மேலை ஆய்வாளர்களான கர்னல். ஆல்காட் போன்றவர்கள் இதை ஏற்றிருக்கிறார்கள்....................
............அம்பேத்கார் போன்றவர்கள் உருவாக்கியது ஒரு விவாதக்களத்தைத் தான். அந்த விவாத களமானது அடிப்படை தருக்கக் கட்டுமானமும் சுயமான ஆய்வுகளும் கொண்டது. அந்த விவாத களமானது தனக்கு முரண்படவும் தன்னை விரிவு படுத்திக் கொள்ளவும் இடமளிக்கிறது........ஈ.வே.ரா உருவாக்கியது மூர்க்கமான ஒரு வசைப் பாடல் பாணியை மட்டுமே. என்ன தான் சிறப்பான நோக்கங்கள் இருப்பினும் அது நேர் எதிரான விளைவுகளையே தான் உருவாக்கும். ஈ.வே.ராவின் பங்களிப்பு அற்பமானதல்ல என்றே நான் கருதுகிறேன்..............
............பெரியாரியர்களின் மனம் எப்படி செயல் படும் என்பதை இக்கட்டுரையில் நான் எழுதியதை என்னை ஒரு பிராமணிய வெறியனாக முத்திரை குத்திய பிறகே அவர்களால் மேற் கொண்டு விவாதிக்க முடியும்....... 
முழு கட்டுரையும் படிக்க:


Wednesday, March 16, 2016

கொலையும் செய்ய துணியும் சாதி வெறியிலிருந்து தப்பிக்க...

சாதி வெறி எனும் சமூகப் பேரிழிவு களைவதற்கான தீர்வுகள்:
1. இந்து மதத்தினை பின்பற்றுவதனாலேயே சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட ஒருவனைப் பார்த்து "நீ ஒரு தாழ்த்தபட்ட சாதியினை சேர்ந்தவன்" என்று பிற ஆதிக்க சாதியினரால் முத்திரை குத்தப்படுகிறான்.

2. இன்றைய சூழ்நிலையில் நிச்சயமாக சாதியை ஒருவன் மாற்றவே முடியாது. மதம் வேண்டுமானால் மாறலாம்.

3. இஸ்லாம் மதத்திற்கு ஒருவன் மாறினால் மட்டுமே ஆதிக்க சாதியினர் சற்று மரியாதை தருவார்கள். "வணக்கம் பாய்","வாங்க பாய்" என்பன போன்ற மரியாதைகள் கிடைக்கும். மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிய அந்த குடும்பம் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்திலிருந்து தான் பின்பு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள் என்பது அனைவராலும் மறக்கப்பட்டுவிடும்.

4. தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவரும் ஒன்றாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் இந்து மதத்தின்படி கடைசியான/ நான்காம் வர்ணமான சூத்திர சாதியினர் என்பவர்கள் இந்து மததிலேயே இல்லாமல் போய்விடுவார்கள்.

5. இப்போது கடைசியாக இருக்கும் வர்ணமான, மூன்றாம் வர்ணமான வைசிய வர்ணத்தினர்தான் அடுத்து இருக்கும் தாழ்வான சாதியினராக இந்து மதத்தில் வாழ்வார்கள். அவர்களும் பிற உயர்சாதியினரான பிராமண மற்றும் பிற உயர் சாதியினரால் "நீ ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினன் ", என்று அவமானப்படுத்தப்பட்டால் அவர்களும் இஸ்லாம் மதத்தினையே பின்பற்ற வேண்டிய கால வரும்.

6. வெளி நாடுகளுக்குச் சென்றாவது அந்த நாட்டின் குடியுரிமை பெற்றும் இந்த சாதிவெறி மிக்க கௌரவக் கொலை, சாதிய படுகொலை போன்ற சமூகப் பேரிழிவிலிருந்து தன்னையோ, தன் பரம்பரையையோ ஒருவன் காப்பாற்றிக் கொள்ளலாம்.

‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’_ நாடு 2200 லும் வல்லரசு ஆகாது




http://www.vikatan.com/news/coverstory/60609-arent-political-parties-guilty-of-honour-killings.art

அன்பிற்குரிய அன்புமணி, நீங்கள் இன்னும் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை. உங்களுக்கு உடுமலைப்பேட்டை சங்கர் கொலையில் அதிக தொடர்பில்லை என்றாலும், நீங்கள் சார்ந்த கட்சி,  தமிழகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சியளிக்கும் ஆணவக்கொலைகள் சிலவற்றில் ஏதேனும் ஒரு வகையில் பிணைந்திருக்கிறது.

டிசம்பர் 12, 2012 கோவையில் நடந்த தலித் அல்லாத ‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’ கூட்டம் நினைவிருக்கிறதா...?

அன்பிற்குரிய அன்புமணி, நீங்கள் இன்னும் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை. உங்களுக்கு உடுமலைப்பேட்டை சங்கர் கொலையில் அதிக தொடர்பில்லை என்றாலும், நீங்கள் சார்ந்த கட்சி,  தமிழகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சியளிக்கும் ஆணவக்கொலைகள் சிலவற்றில் ஏதேனும் ஒரு வகையில் பிணைந்திருக்கிறது.

அதனால், இயற்கையாக அதன் பிரதிநிதியாக மக்களைச் சந்திக்க இருக்கும் உங்களிடம்தான் உரையாடி ஆக வேண்டும்.
உங்களுக்கு டிசம்பர் 12, 2012 கோவையில் நடந்த ‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’ கூட்டம் நினைவிருக்கிறதா...? உங்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. உங்கள் அப்பா மருத்துவர்  ராமதாஸிடம்  கேட்டுப் பாருங்கள்... ஒரு வேளை அவருக்கு நினைவிருக்கலாம். அவர் தலைமையில், கோவையின் மையப்பகுதியில் ஒரு ஆடம்பர விடுதியில் நடந்த கூட்டம் அது. ஏறத்தாழ 4 மணி நேரம் நடந்த கூட்டம். ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள். அமைப்பினரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. நானும், கோவையைச் சேர்ந்த இன்னொரு ஊடகவியலாளரும் மட்டுமே, கட்சிக்காரர் தோரணையில் சென்றதால், உள்ளே அனுமதிக்கப்பட்டோம். அந்தக் கூட்டத்தில் உங்கள் அப்பா, பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் தூவிய வன்ம விதைதான், இப்போது வரிசையாக உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

தயவு செய்து மறுக்காதீர்கள். ’என் அப்பா எதுவும் அப்படி பேசி இருக்க மாட்டார். அவரே, பல சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்தவர்; தாழ்த்தப்பட்டவருக்கு பாதுகாவலர்!’ என்று வழக்கமான உங்கள் பாணியில் நீட்டி முழக்காதீர்கள். அந்த நிகழ்ச்சியின் முழு ஆடியோவும் கைவசம் இருக்கிறது. நீங்கள் விரும்பினால், அதை விகடன் இணையவெளியில் பதிவேற்றத் தயாராகவே இருக்கிறோம்! உள் அரங்கக் கூட்டம்தானே என்ற மிதப்பில், உங்கள் அப்பாவும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு அமைப்பின் தலைவர்களும் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாதவை!
தென்மாவட்டத்தைச் சார்ந்த சாதிய அமைப்பின் பிரதிநிதி ஒருவர், ராமதாஸை நோக்கி, “எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். நம்ம வந்தா இடுப்புல துண்டு கட்டுற பயலுவோ... சைக்கிளைத் தள்ளிட்டுப் போற பயலுவோ.... (இன்னும் அச்சில் ஏற்ற முடியாத பல வார்த்தைகள்) எல்லாம், இன்னைக்கு நமக்கு சரிசமமா நிக்கிறானுங்கன்னா... அதுக்கு நீங்கதான் காரணம்... நீங்க கூட்டணி சேர்ந்து தைரியம் கொடுத்தீங்க... இன்னைக்கு நமக்கு எதிராவே வளர்ந்து நிக்கிறாங்க....” என்றார்.
  
அதற்கு உங்கள் அப்பா, என்ன சொன்னர் தெரியுமா..? “ஆம். தவறு செய்துவிட்டேன். இனி எக்காலத்திலும் அவர்களுடன் கூட்டணி கிடையாது...” என்றார். உங்கள் அப்பாவின் முற்போக்கு முகமூடி கிழிந்து கந்தலாக பரிதாபமாக தொங்கியது அன்று. அரசியலுக்காக, எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்துவிட்டீர்கள், சமூகநீதி கொள்கைகளை எல்லாம் வாக்கிற்காக பலியிட முடிவுசெய்துவிட்டீர்கள் என்பதை அறிந்தேன்.


மாற்றம், முன்னேற்றம், எப்போது நத்தம் காலனி...?

வளர்ச்சியின் நாயகனாக உங்களைச் சித்தரிக்க விரும்பும் அன்புமணி அவர்களே,


கடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடந்த, பத்திரிக்கையாளர் சந்திப்பு நினைவிருக்கிறதா..? ’இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது... எப்படி நினைவிருக்கும்?” என்று கேட்கிறீர்களா...! சரிதான்.. அதையும் நானே நினைவுபடுத்துகிறேன். உங்களிடம் அப்போது ஒரு வினா எழுப்பப்பட்டது, “நீங்கள் வாக்கு கேட்க நத்தம் காலனி செல்வீர்களா...?” என்று. அப்போது நீங்கள் தீர்க்கமாக கூறிய பதில், உங்கள் மீது ஒரு சின்ன நம்பிக்கையை விதைத்தது. “நிச்சயம் செல்வேன். அதுவும் தருமபுரி தொகுதிக்குள்தானே இருக்கிறது... நான் அனைத்து சமூக மக்களுக்குமான பொது வேட்பாளர்..!”

ஒருவேளை இதை நீங்கள் மறந்திருந்தால், அப்போது உங்கள் அருகில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து பா.ம.கவுக்கு வந்தவருமான மருத்துவர் செந்திலிடம் கேளுங்கள். ஆனால், என்ன நடந்தது தெரியுமா? நீங்கள் கடைசி வரை நத்தம் காலனி செல்லவில்லை. நத்தம் காலனிக்கு பக்கத்து ஊரான செல்லாம்கொட்டாய் வரை வந்த நீங்கள், நத்தம் காலனி பகுதிக்கு செல்லவே இல்லை. ஏன்...? அந்த மக்களின் வாக்கை தீட்டாக கருதிவிட்டீர்களா?

“அப்படியெல்லாம் இல்லை... அப்போது அரூர் அருகே என் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது. அது போல் அசம்பாவிதங்களை தவிர்க்கவே நான் செல்லவில்லை...” என்கிறீர்களா...?. ஆனால், நீங்கள் வெற்றி பெற்ற பிறகும், நீங்கள் இதுநாள் வரை செல்லவில்லையே அன்புமணி. அதற்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்...?


உங்கள் உரைகள் வளர்ச்சி குறித்து இருக்கிறது, தனிப்பட்ட முறையில் உங்களுடனான உரையாடல்கள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, ஆனால், பண்பாட்டு தளத்தில் உங்களது கருத்துகள் சூனியமாக இருக்கிறதே..! சங்கரின் படுகொலைக்கு நீங்கள் நேரடியாக காரணமில்லை. ஆனால், “சாதிய வன்முறைகளுக்கு பின் நடந்த தருமபுரி பாராளுமன்ற தேர்தலில், நீங்கள் பெற்ற வெற்றி கொடுத்த தைரியம்தான், இது போன்ற சாதிய தாக்குதல்கள் பரவக் காரணம்” என்றொரு குரல் ஒலிக்கிறதே... அதை உங்களால் கேட்க முடிகிறதா...?


உங்கள் மீதுள்ள களங்கத்தைப் போக்க, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்...? குறைந்தபட்சம் நத்தம் காலனி மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களையாவது பெறுங்கள். அதுவே, பொது சமூகம் உங்களை நம்ப போதுமானதாக இருக்கும்!


நாங்கள் பெரியார் பாதையில் நடப்பவர்கள்:
      
மீண்டும், டிசம்பர் 12, 2012 கோவையில் நடந்த ‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’ கூட்டத்திற்கே வருகிறேன். அந்த கூட்டத்தில் ஒருவர், “நான் பெரியாரை தலைவனாக ஏற்றுக் கொண்டவன். ஆனால், இது போன்ற சாதி மறுப்பு திருமணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது...” என்று தன் உரையை துவங்கினார். அந்த உரையில் வெறும் வார்த்தைகள் மட்டும் நிரம்பி வழியவில்லை, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான திராவிட அரசியலின் தோல்வி, அந்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் தெறித்தது.


பெரியாரை திராவிட இயக்கங்கள் எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது என்பதற்கு இது சான்று... பெரியார் மீது யார் என்ன விமர்சனம் வைத்தாலும், அவர் சாதி மறுப்பு கொள்கையில் மிக தெளிவாக இருந்தார். இன்று அவர் வழி வந்த இரண்டு திராவிட கட்சிகளும், அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறதா...?


    இன்றும் தன் வேட்பாளர் தேர்வு படிவத்தில், அதற்கான நேர்காணலில், தி.மு.க சார்பாக போட்டியிட விரும்புபவர் என்ன சாதி என்பது பிரதானமான கேள்வியாக இருக்கிறது. பெரியார் கொள்கைகளைப் பரப்புவதும், சாதியற்ற சமூகத்தை உருவாக்குவது எல்லாம், இவர்களின் எண்ணம் அல்ல. சாதிய அரசியலை நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக ஊக்குவிப்பது... அதன் மூலம், தேர்தலில் வெற்றி பெறுவதுதான் நோக்கம் என்றால், தயவு செய்து பெரியார் படத்தை உபயோகிப்பதையாவது நிறுத்துங்கள் திரு. கருணாநிதி அவர்களே!

நேரடியான சாதிய அமைப்புகளை விட நீங்கள்தான் ஆபத்தானவராக இருக்கிறீர்கள். ஆம். அமைதியை, சமத்துவத்தை விரும்பும் பொது சமூகம், சுலபமாக சாதியக் கட்சிகளை எந்தக் குழப்பமுமின்றி தன் இடதுகையால் தள்ளிவிட முடியும். ஆனால், முகமூடி அணிந்திருக்கும் உங்களை என்ன செய்வது...?
"நாங்கள் சமூக நீதிக்காக எவ்வளவு பாடுபட்டு இருக்கிறோம் தெரியுமா...? எதற்கெடுத்தாலும் தி.மு.க வை விமர்சனம் செய்யாதீர்கள், சாதி ஒழிய வெறும் சட்டத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்” என்கிறீர்களா..? ஆம், சரிதான். ஆனால் அந்த மாற்றம் வர என்ன செய்து இருக்கிறீர்கள். எந்த தொகுதியில் எந்த சாதி பெரும்பான்மையாக இருக்கிறது என்பதை அறிந்து சீட்டு கொடுப்பதில் நீங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா...?

இளவரசன், கோகுல்ராஜ்... இப்போது சங்கர். இளவரசனின் மரணத்தை தற்கொலையென்றாகிவிட்டது. சரி. மிச்சம் உள்ள கோகுல்ராஜ், சங்கர் படுகொலைக்கு எதிராக நீங்கள் நடத்திய போரட்டம் என்ன...? இல்லை, உங்கள் தேர்தல் அறிக்கையிலாவது ஏதேனும் குறிப்பு, அறிவிப்பு இருக்கிறதா....?

உங்கள் கூட்டணியில் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தித்த அவதூறுகள் போதும், நீங்கள் எவ்வகையிலும் வித்தியாசமானவர்கள் இல்லை என்று வரலாறு பதிவு செய்ய!


ஜெயாவின் கைகளில் குருதி நாற்றம் :

சங்கரை பட்டப்பகலில் கொன்றவர்கள், எந்தப் பதற்றமும் இல்லாமல் வண்டியை எடுக்கிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் தம் முகத்தை மூட வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அவ்வளவு நெஞ்சுரத்தை அவர்களுக்குத் தந்தவர்கள் யார்...? சாதிய அமைப்புகளும், அதன் தலைவர்களும் மட்டுமா..? இல்லை. நிச்சயம் இல்லை. இந்த ஆட்சியாளர்களும், அவர்களது மெளனமும்தான் பிரதான காரணம்.


கடந்த நான்காண்டுகளாக ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அது குறித்து இதுநாள் வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதவராகத்தான் இருக்கிறார் ஜெயலலிதா.


கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்பதுக்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் நடந்ததாக ஒரு புள்ளிவிபரம். ஆனால், இந்த ஆட்சியில் எந்த ஆணவக் கொலையும் நடக்கவில்லை என்று சட்டமன்றத்தில் பேசுகிறார் ஓ.பன்னீர்செல்வம். 

யாரை ஏமாற்ற எண்ணுகிறது இந்த அரசு...?
கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜை கைது செய்ய வக்கற்ற இந்த அரசின் கையாலாகாத தன்மை தான், ’வாட்ஸ் அப்’ தீவிரவாதி யுவராஜை கதாநாயகனாக பல 100 இளைஞர்கள் வரித்துக் கொள்ள காரணமாக அமைந்தது. ஆணவக் கொலைகள் குறித்து பெருமையாக முகநூலில் கருத்துகள் பதிய வைத்தது. அதன் தொடர்ச்சிதான் சங்கரின் கொலை. ஆந்திரா திருடர்களைக் கூட விரட்டியடித்துவிட்டதாக முன்னர் புளங்காகிதப்பட்ட ஜெயலலிதா, இந்த உள்ளூர் ஆணவக் கொலைகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அஞ்ச வேண்டும்? 

கடைசியாக சாமானியன் ஆகிய நமக்கு:

நமது ஆன்மாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து வருகின்றன. நாம் நமக்கே தெரியாமல் ஒரு வக்கிரமான சமூகத்தை உருவாக்கி வருகிறோம். அந்த வக்கிரமான சமூகத்தில்தான் நாளை நம் குழந்தைகள் உலவ விருக்கின்றன. நாளை, குருதி ஆற்றின் கரையோரத்தில் நம் குழந்தைகள் செய்வதறியாது நிற்பதை நாம் விரும்பவில்லை என்றால், சாதிய ஆணவக் கொலைக்கு எதிராக நம் கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்வோம்! 

#‎TNHonourkilling‬

- மு. நியாஸ் அகமது