அமாவாசை: என்ன மணியா! நாமலும் ஒரு சாதி சங்கம் ஆரம்பிக்கலாம்மா?
மணியன்: ஏன் அமாவாசை, நம்ம ஜாதிக்காரன்களுக்கு எதாவது நல்லது செய்யணும்னு உனக்கு ஏதாவது வேண்டுதலா?
அமாவாசை: அட போ மணியா, இந்த நாய்ங்க இருந்தா என்ன? செத்தா என்ன? எல்லாம் ஒரு பொருளாதார முன்னேற்றத்திற்குதான்.
மணியன்: சாதி கட்சியை ஆரம்பிச்சு எப்படி நாட்டின் பொருளாதாரத்தை வளப்ப? ஒண்ணும் புரியலையே.
அமாவாசை: மணியா, நாட்டின் பொருளாதாரம்னா நான் சொன்னேன். நம்மமோட பொருளாதாரத்தை வளர்த்துக்கதான், நாமும் ஒரு சாதி கட்சி ஆரம்பிப்போம்னு சொல்றேன்.
மணியன்: நமக்குன்னு சாதி கட்சி ஆரம்பித்தால் பணம் வந்துடுமா? எங்கிருந்து வரும்?
அமாவாசை: தேர்தல் வந்தா... பெரிய பெரிய கட்சிக்காரன்லாம், பெரிசா பெட்டி, பெட்டியா பணம் கொடுப்பானுங்க. மத்த நேரத்துல கட்டப்பஞ்சாயத்தும், தொழிலதிபர்கள மிரட்டியும், இல்லண்ண அவனுங்க காலில் விழுந்தும் பணம் புடுங்கறதும்தான், நம்ம வாழ்கைத்தரம் முன்னேறத்துக்கு... துணை புரியக்கூடிய ஊக்கக் காரணிகள்.
மணியன்: சாதி கட்சி ஆரம்பிச்ச உடனே நம்ம சாதிக்காரங்கலாம் நம்ம கட்சியில சேர்ந்துடுவாங்களா? அப்படீன்னா நம்ம சாதியில இருக்கிற நல்லா பெரிய படிப்பு படிச்சவீங்களா பார்த்து நம்ம கட்சியில சேர்த்துக்கலாம்மா.
அமாவாசை: நம்ம சாதியில இருக்கிற நல்லா படிச்ச பயலுக சாதி கீதீன்னு கிட்டகூட வரமாட்டானுங்க. படிக்காத பொறுக்கிகளும், அரைகுறையா படிச்ச பக்கிகளும், நிச்சயமா சாதிக்கட்சிக்குள்ள வந்து மாட்டிப்பானுங்க. நல்லவன்களே நமக்கு வேண்டாம். அவனுங்க வைச்சுக்கிட்டு நாக்கா வழிக்கிறது? அவனுங்க சக வாசமே வேண்டாப்பா....
மணியன்: சாதி கட்சி ஆரம்பிச்ச உடனே வந்து சேருவான்களா?
அமாவாசை: சும்மா வந்து எவனும் சேர மாட்டானுங்க. அவனுங்களுக்கு பதவி ஆசையையும் அதனால வரகூடிய பண ஆசையையும், முதல்ல தூண்டிவிடனும். அப்பறம் பாரு எல்லாம் தானாவே நடக்கும்.
மணியன்: புதுசா நமக்குன்னு ஒரு சாதி கட்சியை வைச்சி நீ ஏதோ பெருசா திட்டம் போடுறன்னு மட்டும் நல்லாத் தெரியுது. நாம இரண்டு பேர் மட்டும் என்னத்தைப் பண்றதுண்ணே. அதையும் நீயே சொல்லு.
அமாவாசை: நான் தான் தலைவன். நீதான் செயலாளர். போதுமா அவ்வளவுதான் கட்சி ரெடி. TASMAC போவோம் அங்க நம்ம ஜாதிக்கார நாய்ங்க குடிக்க வருவானுங்க. முதல அவனுங்களுக்கு நாமே நம்ம செலவுல எச்சை குடி ஊத்திக்குடுப்போம். அந்த நாய்ங்க “தலைவா, நீதான் அது, நீதான் இது, வருங்கால முதலமைச்சர் நீதான், பிரதம மந்திரி நீதான், ஏன் வருங்கால் அமெரிக்க அதிபரே நீதான் தலைவா” அப்பிடின்னு குடிச்சுபுட்டு போதை ஏறிப்போய் நம்மல தலைமேல தூக்கி வைச்சு கொண்டாடுங்க. அந்த நாய்களுக்கும் இருக்கவே இருக்கு வரிசையா சில பதவிங்க. அந்த பட்டியல்படி நீதான் நாயே அது, நீதான் நாயே இது அப்படின்னு -துணைத்தலைவர், பொருளாளர், அமைப்பு செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், செயற்குழு உறுப்பினர் 7,13, 21 பேர், அப்படின்னு வாய்க்கு வந்ததை அடிச்சுவுட வேண்டியதுதான். எல்லாருக்கும் சில பதவிகளை தூக்கி எரியுவோம். அவ்வளவுதான். இனிமே பணமழைதான் போ.
மணியன்: அவ்ளோ தான்னா? ரொம்ப ஈசியா இருக்கே.
அமாவாசை: மணியா! தமிழ் நாட்ட பொறுத்தவரை ஜாதின்னா---
1)அசிங்கம் பாக்குறவன், 2) அசிங்கம் பாக்காதவன் என இரண்டே பேர் மட்டுந்தான் இருக்கானுங்க.
மணியன்: சரி அமாவாசை, இப்போ நாம இரண்டு பேரும், நம்ம கூட சில நாயிங்களையும் சேர்த்துக் கிட்டோம். எப்படி பணம் சாம்பாதிக்கறது?
அமாவாசை: எவ்வளவோ வழி இருக்கு. அதுல ஒரே ஒரு வழிய இப்பச் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. இங்க தடுக்கி விழுந்தா காலேஜ் இருக்கு. நம்ம சாதியில எவ்வளவோ பேர் படிக்க கிளம்பிட்டாங்க. பொண்ணுங்களும், பையன்களும் படிக்கிற காலேஜ்ல காதல் என்பது ரொம்ப சகஜம். படிக்க வந்த இடத்தில பொண்ணுங்களுக்கும், பையன்களுக்கும் நட்புணர்வோடு கூடிய ஒரு புரிதல் இருக்கத்தானே செய்யும். அந்த நட்புப்புரிதல் என்பது பல மாணவர்கள்கிட்ட இருந்தாலும் யாரவது ஒரு மாணவன்கிட்ட அவனின் குணநலன்களின் அடிப்படையில், நண்பர்களிடம் பாசத்துடன் பழகும் பண்புகளின் அடிப்படையில் எதாவது பொண்ணுக்கு அவனின் பால் ஒரு ஈர்ப்பு வரத்தான் செய்யும். நாளடைவில் அந்த ஈர்ப்பு அவர்களுக்குள் காதலா நிலை கொள்ளும். இதெல்லாம் நட்போட நாளடைவில சகஜமா நடக்கிற சமாச்சாரம்தான்.
சரி நிதர்சனத்துக்கு வருவோம். நமக்கு வேண்டியதெல்லாம் அந்த காலேஜ்ல எதாவது ஒரு பையன், அவனும் எதாவது தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் என்றும், கீழ் சாதி பையன் என்றும், ஆண்டாண்டு காலமா முத்திரை குத்தப்பட்டு அவன் தலைமுறையிலேயே முதன்முதலா காலேஜ் படிக்க வந்திருப்பான். அந்த பையனுக்கும் நம்ம சாதிய சேர்ந்த பொண்ணுக்கும் மேல சொன்ன மாதிரி எங்கேயாவது ஒரு காதல் வந்திருக்கும்.
காலேஜ்ல சீட்டு வாங்கற அளவுக்கு படிச்ச பையனா இருக்கான்னா உண்மையிலேயே அவன் படிச்ச பையன் தான். பையன்கள் படிக்க வந்துட்டாங்க, கூட பொண்ணுங்களும் இருக்குதுங்க. வயசும் சமுதாயத்தை எதிர்கொள்ளும் வயசு. இந்த வயசுல பசங்கங்களுக்கு இளமையும், துடிப்பும் இருக்குத்தானே செய்யும். உன்னையும் என்னையும் மாதிரி சரியா படிக்காத மரமண்டைக இல்ல இப்ப இருக்கிற பசங்க. உலக அறிவு கைக்குள்ள கொடிக்கிடக்குது. படிச்சு முடிச்சுட்டு குப்பை அள்ளவா போவான். உலகப் பொருளாதாரம் வேகமா முன்னேறிட்டு இருக்கு. அந்த பொண்ணுக்கோ, பையனுக்கோ நிச்சயமா நல்ல வேலை சென்னையிலோ, வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ கிடைக்கத்தான் போகுது. அப்பறம் என்ன அந்த பையனும் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல கம்பேனிலே வேலைக்குச் சேர்ந்து கைநிறைய சம்பாரிக்கத்தான் போறாங்க.
மணியன்: ஏன் அமாவாசை! நாமளே, நல்ல கம்பேனில வேலைதானே வாங்கிக் குடுக்கப்போறோம். அதுக்கு அந்த கம்பேனிக்காரங்க நமக்குக் கமிஷன் குடுப்பாங்க அதானே உன் திட்டம்.
அமாவாசை: நாசமாப் போச்சு. உன்னை வைச்சுக்கிட்டு நான் ஜாதியின் பேரால் பேரவை, சங்கம், கழகம், கட்சின்னு ஆரம்பிச்சு பதவி, அதிகாரம், பணம் அப்படின்னு சம்பாரிச்ச மாதிரிதான். முதல உன்னை தயார் பண்ணுறதே பெரியா வேலையா இருக்கும் போல இருக்கே.
மணியன்: பின்ன என்ன நம்ம சாதிகாரப் பொண்ணுன்னு காதலிக்கிறான்னு சொல்ற. அதுவும் படிச்ச பையன்னு சொல்ற. அந்த படிப்புக்கு நல்ல இடத்தில வேலை கிடைக்கும்னு சொல்ற. நாம தானே சாதி கட்சின்னு ஆராம்பிக்கப் போறோம். அவங்களோட நல்ல வாழ்க்கைக்கு உறுதுணையால இருக்கப் போறோம்.
அமாவாசை: அடேய், லூசு மணியா! நம்ம சாதியிலேயே காலேஜ் நடத்துற எவன்தான் , காலேஜ் சீட்டு இலவசமாத் தருவான். நம்ம சாதிகாரன் நடத்துற ஆஸ்பிட்டல்ல எவன் தான், தன் ஜாதிகாரனுக்கு மருத்துவம் இலவசமா பாக்குறான். நம்ம ஜாதிகாரன் நடத்துற தொழிற்சாலையில தகுதியே இல்லாத தன் ஜாதிக்காரனை எவன் வேலைக்கு எடுத்து நஷ்டப்படுவான். ஜாதி ஜாதின்னு சொல்லுறது எல்லாம் பிசினஸ்டா மண்டையா.
நம்ம ஜாதிகாரன்லேயும் எவனும், நல்லா இருந்திடவேக் கூடாது. ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பிரச்சனையோ, தேவையோ உண்டாக்கிக்கிட்டே இருக்கனும். அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறத்துக்கோ, தேவை பூர்த்தியாகுறத்துக்கோ நம்மளை தேடி அந்த நாய் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கணும். நாம ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை வைக்கணும். அப்பதான் பிஸினஸ் நல்லபடியாப் போகும்.
மணியன்: ஏன் அமாவாசை! நம்ம ஜாதிக்காரன்களுக்குன்னு அப்படி என்ன வித்தியாசமான பிரச்சனை வந்துடப்போகுது. அல்லது தேவை இருந்திடப்போகுது. எல்லோருக்கும் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் தானே தேவைங்கிறது.
அமாவாசை: எங்கெங்கையோ இடி விழுது. உம்மேல ஒரு இடி விழக்கூடாதா. விழுந்தா நானும் நிம்மதியா இருப்பேன்னே.
மணியன்: அசிங்கப்படுத்தா அமாவாசை. நான் என்ன தப்பா சொல்லிட்டேன். நல்லது தானே சொன்னேன்.
அமாவாசை: நல்லத சொல்றதுக்கு எதுக்கு, உனக்கு ஒரு ஜாதி கட்சியோட செயலாளர் பதவி. ஒழுங்கு மரியாதையா கட்சியில கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு வெளிய போட பன்னி. எதுக்கெடுத்தாலும் குறுக்க குறுக்க பேசிக்கிட்டு என்னைய டென்சனாக்குறதே உனக்கு வேலையாச் போச்சு.
மணியன்: சரி சரி . ஒழுங்கா கேட்டுக்கிறேன். மேல சொல்லு.
அமாவாசை: அடிப்படை தேவை கூட பூர்த்தி ஆகாத மனுசங்கிட்ட எப்படி மணி பணம் இருக்கும். பணம் இல்லாம வயித்து பாட்டுக்கே திண்டாடுற நாறப்பயலுக்கு எல்லாம் நாம ஒரு உதவியும் செய்யக்கூடாது. நாம்மால செய்யவும் முடியாது. அப்படி முடியும்னு வைச்சுக்கிட்டாலும் செய்யக் கூடாது. சோத்துக்கு இல்லாத நாய்கள நமக்குக் கீழே அடிமைவேலை செய்ய மட்டும் வைச்சுக்கணும். பீச்சாங்கை வேலைக்கு மட்டுந்தான் வச்சுக்கனும். அதாவது அடிதடி, வெட்டு குத்துக்கு மட்டுமே பயன்படுத்தனும். வேலை முடிஞ்சதும் தூக்கி வெளியே போட்டுடணும். கருவேப்பில்லை தெரியுமா, கறிவேப்பில்லை, கறிவேப்பில்லை.
மணியன்: நாம சொன்னா செய்வாங்களா? அதுக்கெல்லாம் பணம் வேணுமே.
அமாவாசை: எச்சி சோறு நாய். அதையெல்லாம் Brain wash பண்ணி, எலும்பு துண்டு மாதிரி ரூ.5000 கொடுத்து இதை இதை செய்டா, இவனை இவனை அடிடான்னா செய்யும் படிக்காதா பொறுக்கி. அதே ரூ.50000 கொடுத்து இவனை வெட்டுடா அப்படின்னு சொல்லிப்பாரு, கரெக்டா நடு ரோட்ல போய்க்கிட்டு இருக்கிறவனை 100 பேர் பார்த்தாலும் அவமானமே இல்லாம அரிவாள தூக்கிக்கிட்டு போய் வெட்டுவான். அந்த ஒரு அடிமை, அவன் தான் நமக்குத் தேவையே.
மணியன்: அதுக்கெல்லாம் நம்ம அப்பன் பாட்டன் சொத்தா இருக்கு எடுத்து செலவு பண்றதுக்கு. யாருதான் பணம் கொடுப்பா? யாருக்குதான் நம்மோட தேவையிருக்கும்?
அமாவாசை: டேய், உனக்கு மானம், சூடு , சொரணை அதெல்லாம் இருக்கா. இருக்கும். ஆனா பெருசா இருக்காது. ஏன்னா நீ ஒரு அன்னாடம் காய்ச்சி நாய். உனக்கு அதெல்லாம் இருக்காது.
ஆனா, அப்பன்-பாட்டன் சொத்தான நிலபுலத்துல அடுத்தவங்களை சேத்துல இறக்கி வேலை வாங்கிட்டு, வர வருமானத்தில சோத்துல கை வைச்சு சாப்பிட்டுகிட்டு, ஒடம்பு நோகாம வாழ்ந்துகிட்டு இருக்கான் பாரு ஒருத்தன் அவன் கிட்ட போய் நீ யாரு எப்படி பட்ட குடும்பம் அப்படி கேட்டுப்பாரு. அவன் சொல்லுவான் நான் பெரிய அவனாக்கும், நான் பெரிய இவனாக்கும், என் பரம்பரை அப்படிபட்டது, என் பரம்பரை இப்படிபட்டது அப்படின்னு சொல்லுவான். இதுமாதிரி நம்ம ஜாதியில கொஞ்சமே கொஞ்சம் பரம்பரை பைத்தியங்க வாழ்ந்துட்டு இருக்குதுங்க. அதுங்கதான் நம்ம டார்கெட்டு.
மணியன்: டார்கெட்டா? என்னண்ணே அவங்கிட்ட போய் நன்கொடை கேட்கப்போறோமா?
அமாவாசை: நன்கொடை கேட்டா எவன்டா தருவான். அவன் பரம்பரை பற்றி அவனுக்கு இருக்கிற பெருமையான நினைப்பும், பேச்சும் தான் நமக்கு கிடைச்சிருக்கிற துருப்புச் சீட்டு. முதல்ல சொன்னேன் பாரு காலேஜ் படிப்பு, காதல் அதெல்லாம் அவன் வீட்லயும் அந்தந்த காலக்கட்டத்தில் நடக்ககூடியதுதான். இந்த சீன்லதான் நம்மள மாதிரி ஆளுங்க உள்ள போகணும். அந்த ஆளுக்கிட்ட உன் ஜாதி என்ன? உன் பரம்பரை என்ன? உன் பாட்டன் பூட்டன் பெருமை என்ன? நீ போய் இப்படி கேவலமா நடந்துக்கலாமா. அப்படின்னு சும்மா இருக்கிறவன உசுப்பேத்துனும். ஜாதி பேரச் சொல்லி உறி அடிக்கணும். வெறி ஏத்தணும். ஒம்பொண்ண ஒழுங்கா இருக்கச் சொல்லு இல்லன்னா நமக்குதான் அவமானம் அப்படின்னு ஜாதி வெறிங்கிற விஷத்தை கொஞ்சம் கொஞ்சமா அவனுக்குள்ள திணிக்கனும்.
மணியன்: நாம சொன்ன உடன கேட்பாங்களா?
நாம சொன்ன.... உடனேயே நல்ல படிச்ச குடும்பத்தை சேர்ந்த எவனும் நாம சொல்றத நிச்சயமாக் கேட்கவே.... மாட்டானுங்க.
படிச்ச குடும்பத்தை சேர்ந்தவங்ககிட்ட ஜாதி பற்றுதான் ஒட்டிக்கிட்டு இருக்குமே தவிர ஜாதி வெறி என்பதுதெல்லாம் நிச்சயம் இருக்காது. நல்லா புரிஞ்சுக்கணும் ஜாதி பற்று வேற. ஜாதி வெறிங்கிறது வேற.
மணியா! ஜாதி பற்று வைச்சிருக்கிறவனை சாதி வெறியனா மாற்றுவதில்தான் நம்மோட வெற்றியே இருக்கு . அந்த சாதிபற்றுக்கூட இரண்டாம் நிலை நகரங்களில் இருப்பவர்களிடம் மட்டுமே காணப்படும்.
தன் சாதிக்காரர்களையும், சொந்த பந்தங்களையும் விட்டு தள்ளி வாழ்ந்து கொண்டிருக்கும் சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் குடும்பத்தினரிடம் தன் சொந்த ஜாதி பற்று என்பது கறிவேப்பிலை போன்று தான் இருக்கும்.
பொதுவா ஜாதிவெறிங்கிறது நல்லா படிச்சு பெரிய உத்தியோகத்திலயும், பெரிய பதவியிலயும், அதிகம் ஊதியம் வாங்கிறவங்ககிட்டயும் நிச்சயம் இருக்காது. இங்க ஒன்ன நீ கவனிக்கணும், நான் சொன்னது அதிக ஊதியம் தானே தவிர அதிக வருமானம் இல்ல. குறிப்பாக அதிக நிலபுலத்தை வைச்சு வரும் விவசாய வருமானமில்ல.
சரி ரொம்ப ஆழமா போனா நீ மூளை குழம்பி போய்டுவ. சுருக்கமா சொல்றேன் எதையும் சிந்திக்காத எதிர்காலத்தை பத்தி யோசிக்காத ஒழுங்கா படிக்காத முட்டாபயலுகக் கிட்டதான் நம்மமோட பாச்சாவே பலிக்கும்.
இந்த ஒழுங்கா படிக்காத முட்டாளுகளுக்கு சினிமா படத்தில காதல் ஜெயிச்சு காதலர்கள் ஒண்ணு சேர்ந்துடணும் என்று கிளைமாக்ஸ் வரை மனம் பதைபதப்போடவே படத்தை பார்ப்பானுங்க. எத்தனை முறை பார்த்தாலும் காதலர்கள் இணைந்து விடுவார்களா? மாட்டார்களா? என்று மனபதட்டத்துடன் படம் பார்ப்பார்கள் இந்த முட்டாளுங்க. ஆனா
1. தான் பெத்த பொண்ணு காதலிக்கிறதையே ஏத்துக்க முடியாது.
2. சொந்த சாதியில் தன் பொண்ணு காதலிப்பதையும் இவர்களால் ஏற்க முடியாது.
3. அவ்வளவு ஏன் தன் பொண்ணு சொந்த முறைப் பையகளை காதலிப்பதைக் கூட இவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இவன்களுக்கு தன் பொண்ணுக்கு தான் தான் கல்யாணம் பண்ணிவைக்கணும். தான் யாரை கல்யாணம் பண்ணிவைக்கிறமோ அவன்கூட குடும்பம் நடத்தணும். அவன் எவ்வளவு பெரிய குடிகாரனா இருந்தாலும் சரி, மோசமான நடத்தை உள்ளவனா இருந்தாலும் சரி. இதுதான் அந்த முட்டாள் அப்பனின் நிலைபாடு. அவளா யாரையும் பார்த்துட்டு வந்து எனக்கு இவரை பிடிச்சிருக்கு. இவரை கல்யாணம் பண்ணிக் குடுங்கண்ணு கேட்கக்கூடாது. அப்படிப் பேசிட்டா அவ்வளவுதான்.
”பொண்ணாடி வளர்த்து வைச்சுருக்கிற” அப்படின்னு அவனுங்க தன் பொண்டாட்டி மேல இருக்கிற கோவத்தை எல்லாம் எப்படிடா தீர்த்துக்கறதுன்னு நினைச்சு இதுதான் சாக்குன்னு பொண்டாட்டியா பொரட்டி பொரட்டி அடிப்பானுங்க. அவனுங்க எல்லாம் டெய்லி குடிச்சுப்புட்டு, முயற்சி செஞ்சும் ஒண்ணும் முடியாம உளவியல் ரீதியா பொண்டாட்டியால பாதிக்கப்பட்டவங்களா இருப்பானுங்க. சரி என்னத்துக்கு அடுத்தவன் வீட்டு படுக்கையறை சமாச்சாரம்லாம் நமக்கு. என்ன நான் சொல்றது.
தன் பொண்ணு தன் வீட்டிற்கு அடிக்கடி வரும் தன் முறை பையன்களின் மீது ஒரு ஈர்ப்பு வந்து அதன் மூலம் காதல் கொண்டாலும் அதனையும் ஏற்கும் பக்குவப்பட்ட மனம் அற்றவர்கள் தான் இந்த முட்டாள் பெற்றோர்கள்.
சொந்த முறை பையனை காதலிக்கிறதையே இங்க எவனாலும் ஏத்துக்க முடியாது.
சொந்த சாதியில் பொண்ணு காதலிக்கறதையே இங்க எவனாலும் ஏத்துக்க முடியாது.
தன் சாதியில் இல்லாம தனக்கு இணையான சாதியில பொண்ணு காதலிக்கிறதையும் இங்க எவனாலும் ஏத்துக்க முடியாது.
அப்படியிருக்கும் போது அவன் பொண்ணு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பையனை காதலிக்கிறதை எவனால ஏத்துக்க முடியும். இதெல்லாம் நமக்கு ஆண்டவனா பார்த்து கொடுத்திருக்குற கொடை தான் மணி.
தம்பி: அப்படின்னா யாரும் ஏத்துக்கறதே இல்லையா?
அண்ணன்: முதல்ல ஏத்துக்க மாட்டாங்க. அப்பறம் அவங்க வீட்ட விட்டு ஓடிப்போய் கல்யாண பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் நல்லா வாழ்ந்ததுக்கு அப்பறம் ஏத்துக்குவாங்க.
இவ்வளோ விசயத்தையும் நாம நல்லா ஸ்டெடி பண்ணிட்டுதான் அந்த குடும்பத்தை கெடுக்கற வேலையைப் பாக்கப்போணும்.
அப்பங்காரன் சொன்ன உடனே அவன் பொண்ணு இல்ல எவன் பொண்ணும் கேட்டுராது. அவனுக்கு அவன் பொண்ணு தன் பேச்ச கேட்கல அப்படிங்கிற அவமானமும் கூட சேர்ந்துடும். நான் தான் பெத்தேன், வளத்தேன், படிக்க வைச்சேன், மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பணணி வைக்கத்தெரியாதா எனக்கு. அப்படின்னு மாடு வளர்க்கிற மாதிரியே அப்பன்காரன் சிந்திப்பான். அப்படியே தான் தன் சிந்தனையே வெளிப்படுத்துவான். அவன் அப்படித்தான் பேசணும். இல்லாட்டிக்கூட நாம அப்படித்தான் பேசுறதுக்கு அவனை தூண்டனும். அப்பத்தான் நாம நல்லா இருக்க முடியும்.
பொண்ணோ, பையனோ நல்லா படிக்க வைக்கிறது மட்டுதான் பெற்றவர்களின் கடமையா இருக்கணும். மத்தபடி அவர்களின் வாழ்க்கை அவர்களின் கையில் என்பது தான் உண்மையும் கூட. ஆனா எல்லோரும் நல்ல சிந்தாந்தப்படி போனா நமக்கு எங்க வேலையிருக்கு. நாம மூடிட்டுப் போக வேண்டியதுதான்.
முதல்ல ஆரம்பிக்கிறவன் மேல இருப்பான், எல்லாமே MLM மண்டையா மல்டி லெவல் மார்க்கெட்டிங்