Saturday, April 1, 2017

கோவிலுக்கு போய் சாமி கும்பிடுங்கள்

கோவிலுக்கு போய் சாமி கும்பிடுங்கள்.

உலகின் 99% பிரச்சினைகளுக்கு அவனவன் புத்தியில் புகுத்தப்பட்டுள்ள கடவுள் உருவமும், அந்த உருவத்தைத் தாங்கிப்பிடிக்கும் மதமும், மதவெறியும் தான் காரணம்.

கடவுளை உனக்கு கற்பித்தது யார்? உன் தந்தையா? அப்படியென்றால் அவருக்கு என்று படி நிலைகளை உயர்த்திக் கொண்டே செல்.

 தமிழனுக்கு/ இந்தியனுக்கு கற்பித்தவன் யார்? அமெரிக்கனுக்கு கற்பித்தவன் யார்? ஜப்பானியனுக்கு கற்பித்தவன் யார்? அரேபியனுக்கு கற்பித்தவன் யார்?
ஏன் உன்கடவுளே பிற நாடுகளிலும் தன்னையே நிலை நிறுத்திக்கொள்ளவில்லை?

அல்லது மனிதனே கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டானா? சாதாரணமாக மனித குலத்தில் பிறந்து, அவன் இறப்பிற்குப்பின் கடவுள் நிலைக்கு பிற்கால மனிதர்களால்  உயர்த்தப்பட்டார்களா?

அப்படி உயர்த்தப்பட்டவர்கள் எப்படி மனிதர்களை உயர்வு தாழ்வாகப் படைபார்கள்? அவர்களுக்கு  பின் உள்ள அரசியல் என்ன அதனால் பயன் பெறுபவர் யார்?

ஏன் கடவுளை தொழவோ தொட்டு கும்பிடவோ எனக்கு அனுமதி இல்லை..?

கோவில் உண்டியலில் போடப்படும் காசு எங்கு போகிறது. அவ்வளவு சக்தி உள்ள கடவுள் மனிதனின் பிச்சைக் காசை வேண்டுகிறாரா?

ஏன் நிறைய கடவுள்கள் ஏன் நிறைய மதங்கள்?

உலகம் ஒன்றுதான் என்னும் போது எப்படி பல கடவுள்கள் இருக்க முடியும். பல மதங்கள் இருக்க முடியும்?

உலகில் அத்தனை உயிர்கள் இருக்கும் போது கடவுள் மட்டும் மனித உருவில் இருப்பது ஏன்?

இந்த கடவுள் கோட்பாட்டிற்குப் பின் உள்ள திருட்டு மத அரசியல் என்ன?
அந்த மத அரசியலின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்யும் மனிதர்கள் யார்யார்? அந்த மனிதர்கள் எந்த வர்ணத்தினைச் சார்ந்தவர்கள்? எந்த சாதியினைச் சார்ந்தவர்கள்? எந்த மொழியினைச் சார்ந்தவர்கள்?

பார்ப்பணீயத்தை நோக்கி என்றும் கேள்வி கேட்காதீர்கள்?
பார்ப்பணீயத்தை வீழ்த்தும் சக்தி கேள்வி கேட்பது அல்ல?

பார்ப்பணீயத்தை ஒதுக்குங்கள். பார்ப்பணீயத்திடமிருந்து விலகி நில்லுங்கள்.

பார்ப்பணீயத்தின் திறனையே சடங்குகளுக்கு உயிரூட்டுவது. அதைச் செயல்படுத்த அக்னி வேள்விகள், யாகங்கள் நம்பவைப்பது. அப்போது திரும்பத் திரும்பச் சொல்வதற்கு சம்ஸ்கிருத மொழியில் உள்ள சாதாரண வார்த்தைகளை ஏதோ புதிரான மந்திரங்கள் என பிரமிப்பைக் கூட்டுவது. அம்மந்திரங்களை எழுதிவைத்துள்ள சம்ஸ்கிருத மொழியே அதன் ஆணிவேர். அதுவே  பிறரிடமிருந்து அவர்களைப் பிரித்துக் காட்டுகிறது. அம்மொழியே அவர்களின் வலைப்பின்னல். அம்மொழியே அவர்களுக்கான தொடர்பு மொழி.

சமஸ்கிருதம் அறியாத மேலைநாடுகள் அறிவியல் வளர்ச்சியில் உலகின் உச்சாணிக் கொம்பில் உள்ளன.

இவர்கள் இன்னமும் யாகம் வளர்த்து தீயில் பொருட்களை போட்டு தேவர்களுக்கு உணவு படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பார்ப்பணீயத்திற்கு சோம்படிக்கும் கூட்டமும் அவர்களை நக்கி பிழைக்கும் பாத வருடிகளும் எல்ல நிலையிலும் இங்கு இருக்கிறார்கள்.

பார்ப்பணீயத்தை கேள்வி கேளுங்கள், பார்ப்பணீயத்தை  ஒதுக்க ஆரம்பியுங்கள். பார்ப்பணீய சடங்குகளை செய்யாமல் புறக்கணியுங்கள்.

மதமும், கோயிலும், மடமும் MLM businessதான்.