![]() |
கலீல் ஜிப்ரான் (1883-1931) |
"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல;
அவர்கள் இயற்கையின் {கடவுளின்} குழந்தைகள்.
உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களேயன்றி, உங்களிடமிருந்து அல்ல.
உங்கள் குழந்தைகள் உங்களுடன் இருந்தாலும்
உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல
உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்குத் தரலாம்
உங்கள் எண்ணங்களை அல்ல.
அவர்களுக்கென்று தனி சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடல்களுக்குத்தான் நீங்கள் பாதுகாப்பு தரமுடியும் ஆன்மாக்களுக்கு அல்ல.
அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை
அங்கே நீங்கள் செல்லமுடியாது
உங்கள் கனவுகளிலும் கூட.
அவர்களைப்போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களை உங்களைப்போல் ஆக்கிவிடாதீர்கள்.
வாழ்க்கை பின் திரும்பிச்செல்லாது; நேற்றுடன் ஒத்துப்போகாது.
நீங்கள் வில்கள். உங்களிடமிருந்து எய்யப்படும் உயிருள்ள அம்புகளே குழந்தைகள்."
அம்பு எதை அடையவேண்டும் என்ற இலக்கை வில் தீர்மானிக்காது
அம்பை எய்துபவன்தான் தீர்மானிப்பான்,
அம்பை எய்துபவன் இயற்கையே {கடவுளே}, நீங்கள் அல்ல,
நீங்கள் வெறும் வில் தான் !